மறு அறிவித்தல் வரை மாணவர்கள் பல்கலைக்கழக வாளாகத்திற்குள் பிரவேசிக்ககூடாது!

யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைகேடான நடவடிக்கையின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, விடுமுறை வழங்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

விரைவில் தீர்வை தாருங்கள்; கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை

கேப்பாபுலவு சொந்த நிலத்தை பெற்றுக்கொள்வற்காக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பதின்மூன்றாவது நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு புலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்த போராட்டம் கடந்த முதலாம் திகதி முடிவுக்கு வந்தநிலையில் கேப்பாபுலவு பூர்வீக நிலத்தை கோரி மக்கள்...
Ad Widget

மீண்டும் பரபரப்பாகும் அப்ப விவகாரம்: கூட்டமைப்பின் கூட்டத்திற்கு அப்பம் சாப்பிட்டுவிட்டு வந்த சம்மந்தன்

வவுனியாவில் இன்று நடைபெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்கு வரும் போது நான் அப்பம் சாப்பிட்டு விட்டே வந்தேன் என கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். கூட்டம் ஆரம்பமாக தயாரான நிலையில் மண்டபத்தில் அமர்ந்திருந்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், தனக்கு அருகில் இருந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற...

தமிழ் தேசியக் கூட்டமைப்பே எனது கட்சி உருவாக்கத்திற்கு காரணம் : கருணா

தமிழ் மக்களுக்கான சிறந்த தொரு அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்பார்த்திருந்த போதிலும் கூட்டமைப்பு தமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லையென முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கான கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றியிருந்தால் தனது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர...

சாகும் வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த மக்கள்

கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவர் சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை குறித்த இருவரும் இராணுவ முகாமிற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு தெரிவித்த மக்கள் கெடந்த முதலாம் திகதி முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் கேப்பாபுலவு...

மக்கள் போராடும் முன் ; வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவற்றை விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கேசன்துறை,...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நம்பிக்கை தன்மை கேள்விக்குறி

ஐ.நா தீர்மானத்தின் உள்ளடங்களை நிறைவேற்ற மாட்டோம் என வெளிப்படையாக கூறும் அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழக்கும் நடவடிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என சிவில் சமூக அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக மையத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய சிவில் சமூக ஊடக...

வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பு!

வடக்கு மாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கு சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்றைய தினம் அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒழுங்குபடுத்தியுள்ளார். இச்சந்திப்பில் வடமாகாண பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் கொண்ட குழுவும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், அஸ்வின்...

ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக்கும்பல் அட்டூழியம் கணவன்,மனைவி மீது வாள்வெட்டு!

அதிகாலை வேளை கூரிய ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வசாவிளான் கிழக்கு கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் தம்பதியர்களான தம்பு மகாதேவன் (வயது 65), மகாதேவன் இராஜேஸ்வரி (வயது 61) ஆகிய...

சீ.சீ.ரி.வி பொருத்தி கேப்பாப்பிலவு மக்களை கண்காணிக்கும் ராணுவம்

தமது பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு கோரி கடந்த 8 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களை 24 மணிநேரமும் ராணுவம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவ முகாமுக்கு முன்னால் சீ.சீ.ரி.வி. கமராவை பொருத்தி...

தமிழ் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் இணைந்து ஐநா மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைத்துள்ள கூட்டு மனு

தமிழ் சிவில் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் இணைந்து ஐநா மனித உரிமை பேரவைக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கூட்டு மனுவின் தமிழ் வடிவம்.. இலங்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம். தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்களின்,...

யாழ் பல்கைலைக்கழக மாணவர் கொலை வழக்கை இடமாற்ற சட்ட மா அதிபர் எதிர்ப்பு

அண்மையில் போலிஸ் துப்பாக்கி சூடு காரணமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை வட கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் அமைந்துள்ள நீதிமன்றமொன்றுக்கு மாற்றுமாறு அதன் சந்தேக நபர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து போலிஸ் உறுப்பினர்கள் இந்த மனுக்களை...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை...

காணாமல்போனோரில் பலர் வெளிநாடுகளில்: பிரதமர் மீண்டும் குற்றச்சாட்டு

காணாமால்போயுள்ளதாக கூறப்படும் பலர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை இராணவத்திடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலேயே பிரதமர் மீண்டும் இந்தக் கருத்தை...

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம்!: வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சுக்கு இடமில்லை

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் கீழான 30/1க்கு உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அப்பொழுது சமர்ப்பித்த அனுசரணை நாடுகள் இந்த கால அவகாசத்திற்கு உடன்பட்டிருப்பதாக பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்....

சுன்னாம் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குற்றசாட்டு

வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து உள்ளதா என்பதனை ஆய்வு செய்வதனை விடுத்து , மற்றைய குழுக்களின் ஆய்வு அறிக்கைகளில் தவறு கண்டு பிடித்துள்ளார்கள். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையில் நேற்றயதினம் வடமாகாணத்தில் உள்ள நீர் பிரச்சனை தொடர்பில்...

கடிதத்தில் கையெழுத்திட்டதில் தமிழ்க் கூட்டமைப்பிற்குள் குழப்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரியும், வழங்கக் கூடாது என்று கோரியும், அனுப்பப்பட்ட மனுக்களில் போலியான கையெழுத்துகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்பட்டது....

மக்களது காணிகளை பறித்து ராணுவத்திற்கு கொடுப்பதை அரசு நிறுத்தவேண்டும்: கஜேந்திரகுமார்

மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை பறித்து ராணுவத்தினருக்கு கொடுப்பதை அரசாங்கம் விட்டுவிட்டு, கஷ்டப்பட்டு வாழும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சுமார் மூன்று தசாப்த காலமாக காணி உறுதி அற்ற நிலையில் வாழ்ந்துவரும் கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், நேற்று...

காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை: அரச அதிபர்

காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கடிதம், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த காணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும்...

கிளிநொச்சியில் 244 பேருக்கு பன்றிக் காய்ச்சல்! கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை!!

கிளிநொச்சியில் 37 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் உறுதிசெய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் 9 பேர் சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. திருநகர், புதுமுறிப்பு, தர்மபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வநகர், வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர்,...
Loading posts...

All posts loaded

No more posts