இரு பிரதான வேட்பாளர்களும் வாக்களித்தனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் இன்று வியாழக்கிழமை காலை தமது வாக்ககளைப் பதிவுசெய்துகொண்டனர். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிரும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது வாக்கை இன்று காலை தனது குடும்பத்தாருடன் சென்று பதிவு செய்துகொண்டார். இதேபோன்று பொது எதிரணி சார்பாகப் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால...

எமது வார்த்தைக்கு மதிப்பளித்து மக்கள் வாக்களித்து வருகின்றனர் – மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ் மக்கள் ஆர்வத்துடன் இன்று வியாழக்கிழமை (08) காலை முதல் வாக்களித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கொல்லன் கலட்டி தமிழ் கலவன் பாடசாலையில் தனது மனைவியுடன் சென்து வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மாவை இவ்வாறு தெரிவித்தார்....
Ad Widget

கள்ளவாக்கு போட முயற்சித்தால் தலையில் சுடவும் – மஹிந்த தேசப்பிரிய

வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

போலியான துண்டுப்பிரசுரங்களை நம்பி ஏமாறாமல் துணிச்சலுடன் வாக்களிக்கவும் – மாவை

தமிழர்களாகிய நாங்கள் மகிந்தவையும், மைத்திரியையும் நிராகரிப்போம்.தேர்தலைப் பகிஸ்கரிப்போம்.வாக்களிப்பை தவிர்ப்போம்.அல்லது எமது வாக்குகளைச் செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகப் பிரிவு என்று உரிமை கோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ்.குடாநாட்டில் பலபாகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள்...

யாழில் சுறுசுறுப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்த வகையில் யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு...

யாழ் மாவட்டத்திலும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலிற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். நாளையதினம (08) நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் இன்று (07) யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றும் உயரதிகாரிகளின் தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும்...

பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது – தேர்தல் ஆணையாளர்

மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை கவனத்திற் கொள்ள வேண்டாம் எனவும் அந்த உத்தரவினை உதாசீனம் செய்து வாக்களிப்பில் பங்கேற்குமாறு கோரியுள்ளார். எந்தவொரு பாதுகாப்பு காரணங்களையும் காட்டி படையினர் வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்து முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த...

மக்கள் பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுதி செய்யுங்கள்!

மக்கள் அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுதிப்படுத்துமாறும், அரச ஊடகங்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு சார்பாக செயற்படுவதை நிறுத்துமாறும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரசார நடவடிக்கைகளின்போது பல வன்முறைச் சம்பவங்களும், மிரட்டல்களும் இடம்பெற்றன என இலங்கையை சேர்ந்த கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன. வாக்காளர்கள், வேட்பாளர்கள்,...

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் திட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனத் தன்மையினை பாதுகாக்க கோரி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாட்டினை செய்துள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பினை செய்து வருவதுடன் தேர்தல் பிரசாரத்திகதி முடிவடைந்தும் ஜனாதிபதி தனது பிரசாரங்களை அரச ஊடகங்களூடாக பிரசுரிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாளை...

தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பில் இராணுவத்தையும் அழைக்கும் சாத்தியம்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 71,100 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக பாதுகாப்பு பணிகள் தொடர்பில் இராணுவத்தினரின் பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இதன் பொருட்டு இராணுவப் படையணி தயார் நிலையில் உள்ளதுடன் இராணுவ படையணியை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைக்கு பொலிஸாரே முற்று முழுதான...

வெளிநாட்டவர்களின் கண்காணிப்பில் வடக்கு

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த கண்காணிப்பாளர்களில் ஒரு தொகுதியினர் நேற்று (06) வடக்கிற்கு விஜயம் செய்து பணிகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திரவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பில் இந்த சந்திப்பின்...

கடந்தகால வரலாற்றை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களியுங்கள் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

தமிழ் மக்கள் அனைவரும் கடந்த கால வரலாறுகளைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தநிலையிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளது. ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின்...

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம்

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் தகுந்த ஆவணங்களுடன் சென்று வாக்களிக்க முடியும் என யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சகருமான சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (6) தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஜனாதிபதித் தேர்தலுக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதியில் இருந்து வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக டிசெம்பர் 3ஆம் திகதி வரை...

சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக முறைப்பாடு – கபே

தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரக்கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் வராவிட்டால் எதிர்காலத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது எனக்கூறி அழைத்தமை தொடர்பில்...

போலிப் பிரசாரங்களை நம்பாதீர்கள்! அன்னச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்!!

"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8 ஆம் திகதி மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களும் தமது பொன்னான வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

ஜனாதிபதி தேர்தலன்று யாழ்ப்பாணத்தில் 191 வாகனங்கள்

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாக்களிக்கும் நடவடிக்கைகளுக்கு தனியார் பஸ்கள் மற்றும் போக்குவரத்துச் சபை பேருந்துகள் என 191 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் 63 பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் தெரிவித்தார். பருத்தித்துறை சாலையிலிருந்து 10 பேருந்துகளும், காரைநகர் சாலையிலிருந்து 10...

வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு

தேர்தல் வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை (05) தெரிவித்தார். நேற்று அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், 'கடந்த இரண்டு நாட்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் போக்கை கண்டிப்பதுடன் இது மிகவும் மோசமான வன்முறையாகும்'...

அதிகார பரவலாக்கல் என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை

'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும்...

ஜனாதிபதித் தேர்தலை நீதியானதொரு தேர்தலாக நடாத்த சகல தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம் – அரச அதிபர்

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளன. அந்தவகையில் யாழ்....

தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருமலையில் தாக்குதல்

கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று முன்தினம் (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும்...
Loading posts...

All posts loaded

No more posts