எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த கண்காணிப்பாளர்களில் ஒரு தொகுதியினர் நேற்று (06) வடக்கிற்கு விஜயம் செய்து பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திரவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. வன்முறைகள் முறைகேடுகள் அற்ற வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் உள்நாட்டு அரசியல்வாதிகளிடம் கோரியுள்ளனர்.