Ad Widget

வடக்கில் 60 வீத வாக்குப்பதிவு!

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆகக் கூடுதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவாகியுள்ளது. இதன்படி-

யாழ்ப்பாணம் – 61%
கிளிநொச்சி – 64%
முல்லைத்தீவு – 73%
வவுனியா – 66%
மன்னார் 68%

தற்போது வாக்குப் பெட்டிகள், பாதுகாப்பாக வாக்கொண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Related Posts