யாழில் சுறுசுறுப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.

காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அந்த வகையில் யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மிகவும் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

Related Posts