- Friday
- June 20th, 2025

ஏழு வாக்குகளால் அரசியலுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு அருகதை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சாவகச்சேரி கண்டிவீதியில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில்...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். இலக்கம் 36 மார்டின்வீதி யாழ்ப்பணத்திலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தமது எழுத்து மூலமான...

பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி, ஜுலை 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கமுடியும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜூலை 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னரான புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் 1ம் திகதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பு விடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் எப்போதும் தயாராகவே உள்ளது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரசிடமிருந்து அதற்கான அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். அத்துடன், 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டாலும், தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் கூறமுடியாது என்று தெரிவித்த...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த புதிய தேர்தல் திருத்தச் சட்டமூல ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறையை ஜனாதிபதி நேற்று அமைச்சரவையில் சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய, எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் முறைமையில்...

எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) பத்து மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார். இதன்படி எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல்,...

நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே நடத்தப்படவுள்ளன. 2011ஆம் ஆண்டு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் இடைநிறுத்தி...

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அந்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ ஆட்சிக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வருடங்களுக்கு புதிய அரசியலமைப்பு திருத்தம்...

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள்...

2015 சனாதிபதி தேர்தலில் 4 லட்சத்து 49072 வாக்குகளால் மைத்திரி வெற்றி பெற்றுள்ளார்.அவ்வெற்றிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளே காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நோக்குமிடத்து ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே வன்முறைகள் குறைந்த, அமைதியான தேர்தலாக இத்தேர்தலை குறிப்பிட முடியுமென தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலையம் குழு தெரிவிக்கின்றது. இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலைய தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்தார். 1982ஆம் ஆண்டுக்குப்பிறகு...

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணி;ல் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என...

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர். வாக்களிக்கும் உரிமையும் திருகோணமலை மாவட்டத்திலேயே உள்ளது. எனினும் அவர் தனது வாக்குரிமையினை செலுத்தச் செல்லாது கொழும்பிலேயே இருந்துள்ளார். அவர் வாக்களிக்கச் செல்லாதமைக்கு சுகவீனம் காரணம்...

இம்முறை சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வடக்குகிழக்கு மாகாணம் முற்றாக நிராகரித்து மைத்திரியை தெரிவுசெய்துள்ளது நாடுமுழுவதும் அறவிக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி மைத்திரி அவர்களே முன்னணியில் இருக்கின்றார்!

யாழ். மாவட்டம் தேர்தல் தொகுதிகளுக்கான சில முடிவுகள் பருத்தித்துறை மைத்திரி 17388 மகிந்த 4262 சாவகச்சேரி மைத்திரி 23514 மகிந்த 5647 மானிப்பாய் மைத்திரி 26958 மகிந்த 7225 உடுப்பிட்டி மைத்திரி 18119 மகிந்த 3837 இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி மைத்திரிக்கு 311,117 (56.16%) மகிந்த விற்கு 236,386 (42.67%) கிடைக்கபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆகக் கூடுதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவாகியுள்ளது. இதன்படி- யாழ்ப்பாணம் - 61% கிளிநொச்சி - 64% முல்லைத்தீவு - 73% வவுனியா -...

All posts loaded
No more posts