தமிழர் பிரதேசத்தில் விகாரை நிர்மாணம்; உண்ணாவிரதமிருந்தவர்கள் கைது

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரையும் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்து கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டு, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதத்துக்கு...

கிளிநொச்சி மாணவியை காணவில்லை

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு...
Ad Widget

கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்;குட்பட்ட கிராமமான 2ஆம் கட்டை கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் சிறுமியாருவர், வெள்ளிக்கிழமை (29) மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கோரக்கன்கட்டு குடியிருப்பு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி (வயது 13) எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி காலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில், அவரின்...

கொக்கிளாய் தனியார் காணியில் சட்டவிரோதமான விகாரை உருப்பெறுகிறது

முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. பொது மக்களின் தகவலையடுத்து நேற்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதை நேரில் உறுதிப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் காணியின் ஒரு பகுதியையும் இதமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து...

கிளி. சிறுமி மீதான வன்கொடுமை : சந்தேகத்தில் 15 வயதுச் சிறுவன் கைது!!

பரந்தனில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விடயத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கைதாகியுள்ளான். கிளிநொச்சி பொலிசார் நேற்று சிறுவனை கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பரந்தன் சிவபுரம் பகுதியில் ஏழு வயதான பாடசாலை சிறுமி கடத்தப்பட்டு, வாய் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார். மயக்கமடைந்த மாணவியை...

கிளிநொச்சியில் கொடூரம்!! பாடசாலை சென்ற 7 வயதுச் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்முறை!

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பொதுமலசல கூடத்துக்குள் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனக் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரை இடைவெளியில் மறித்த சிலர் பொதுமலசலகூடத்தில் வைத்து...

உறவுகளை அஞ்சலிக்கக் கூடிய மக்களின் கண்ணீரால் தோய்ந்தது முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்நிலையில், மே 12 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

புங்குடுவுதீவு மாணவி படுகொலையை கண்டித்து யாழ்.பல்கலையில், கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டங்கள்!

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதேவேளை கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகளும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். மாணவி படுகொலைக்கு நீதி...

இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் இன்றில் இருந்து 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என்று வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார். அதன்படி இன்றைய தினம் குறித்த நினைவேந்தலை ஆரம்பிக்கும் முகமாக நினைவுச்...

கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தில் ஒருவர் அடித்துக் கொலை!

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலை பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வகையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. அந்த காட்டுப்பகுதிக்குச் சென்றவர்கள் சிலர் சடலத்தை கண்டு அக்கராயன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், பொதுமக்களால் சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட இருவரையும் கைதுசெய்தனர்....

கிளிநொச்சியில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகம் திறப்பு!

இலங்கை மத்திய வங்கியின் ஆறாவது பிரதேச அலுவலகம் நேற்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஒன்பது மணிக்கு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தனர். ஏற்கனவே அநுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம்,...

போரால் நலிந்த எமக்கு வீட்டுத் திட்டம் வழங்குக; முள்ளிவாய்க்கால் மக்கள் நேற்றுப் போராட்டம்

பெரும் போர் அழிவுகளில் சிக்கி வசதிகளற்று வாழ்க்கையை நகர்த்தும் எங்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படாது திருப்பப்பட்டமைக்கான காரணங்கள் என்ன?. எமக்கு வீட்டுத் திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கோரி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மக்கள் நேற்று கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தினர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 வரையான...

பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பஸ் சேவை

பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பூநகரியின் ஏனைய கிராமங்களுக்குச் செல்வதற்கான பஸ் வசதியை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் முயற்சியால் வெள்ளிக்கிழமை (24) அந்தப்பகுதிக்கு இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் சேவை ஆரம்பித்து...

ஊனமுற்றோரின் நலன்களை பேண கிளிநொச்சியில் நிலையம்!

சமூக சேவைகள் அமைச்சினால் ஊனமுற்றோரின் நலன்களை வடமாகாணத்தில் பேணக்கூடிய பிராந்திய நிலையமொன்று மிக விரைவில் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராய அமைச்சின் திட்டப்பணிப்பாளர் ஆர்.இராமமூர்த்தி அண்மையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களுக்கு வருகை தந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மேற்படி 03 மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த போது ஊனமுற்றோரின் தேவைகள் குறித்து கேட்டறிந்து...

கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனம்

கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் யாழ் விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் குறித்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் அவற்றின் உட்கட்டுமான அமைப்புக்களை மேம்படுத்தவுள்ளது. சிவில் பாதுகாப்புப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை வைக்கப்பட்டு பின்னர்...

இ.போ.ச. பஸ் – பிக்கப் விபத்தில் இருவர் பலி! இருவர் படுகாயம்!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்ஸும் இலங்கை மின்சார சபையின் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்றிரவு 7.30 மணிக்கு மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் தச்சரம்பனில் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த பணியாளர்களான மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் ஜீவராஜ் (வயது 26),...

தனது காணியை இராணுவம் விடுவிக்கவேண்டும், பரந்தனில் பெண் உண்ணாவிரதம்!

கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....

தாய் கொடுத்த புத்தாடை பகிர்வதில் அண்ணன் தம்பி இடையே மோதல்: அண்ணன் அடித்துக் கொலை!

புதுவருடத்திற்கு தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளை பரிந்து கொள்வதில் மகன்மார்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த துரதிஸ்டவசமான செய்தி முல்லைத்தீவு - முல்லியாவெலி கண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் மூத்த சகோதரர் (19 வயது) கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய இளைய சகோதரர்...

தென்பகுதி மீனவர்களுக்கு எதிரான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

முல்லைத்தீவு நாயாற்று கடல் பகுதியில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையில் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றபோது, ரவிகரன் இந்தப் பிரேரணையை கொண்டு...

உடையார்கட்டில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்!

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு தேராவில் பகுதியில் நேற்றுமன்தினம் நள்ளிரவு 12மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் இப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சிப்பாய் வீட்டுக்குள் நுழைவதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்துவிட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் கூடி படைச்சிப்பாயை துரத்தியுள்ளனர். இந்நிலையில்...
Loading posts...

All posts loaded

No more posts