Ad Widget

கிளிநொச்சியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணைக் காணவில்லை!

கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த கணேசமூர்த்தி சாந்திமலர் (வயது 48) என்ற பெண்ணை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லையென, அப்பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் வழக்கு விசாரணைக்கு ஒன்றுக்கு வருமாறு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென உறவினர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts