Ad Widget

கிளி. சிறுமி மீதான வன்கொடுமை : சந்தேகத்தில் 15 வயதுச் சிறுவன் கைது!!

பரந்தனில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விடயத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கைதாகியுள்ளான். கிளிநொச்சி பொலிசார் நேற்று சிறுவனை கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பரந்தன் சிவபுரம் பகுதியில் ஏழு வயதான பாடசாலை சிறுமி கடத்தப்பட்டு, வாய் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார். மயக்கமடைந்த மாணவியை பிரதேசமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்த 15 சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்று தெரியவருகின்றது.

இந்த மாணவனுடன் இணைந்து இன்னும் பலர் இந்த கொடூரத்தை புரிந்ததாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற சிவபுரம் பகுதி மிக பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகிறது. இங்குள்ள மக்கள் குடிசைகளில் வசிக்கின்றனர். சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை. மாணவர்கள் நீண்டதூரத்திற்கு நடந்தே செல்கின்றனர். இது பற்றி பலரும் முறையிட்டபோதும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இங்கு வறுமை தலைவரித்தாடுவதால் பல மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை. பெற்றோர் கூலிவேலைக்கு சென்றுவிடும் நிலையில், இவர்கள் சிறுசிறு குழுவாக பகலில் அலைந்து திரிவதாகவும், இப்படியான குழுவொன்றினாலேயே இந்த கொடூரம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

Related Posts