Ad Widget

துணுக்காய் பிரதேசத்துக்கு சுற்றுலா நீதிமன்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி முதல் புதிதாக சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை நீதிச் சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுற்றுலா நீதிமன்றத்தினூடாக மாங்குளம் மற்றும் மல்லாவி ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கான வழக்குகள் மாதத்தில் இரு தடவைகள் புதன்கிழமைகளில் துணுக்காய் பிரதேச செயலக கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றுலா நீதிமன்றத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மற்றும் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இரு பொலிஸ் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் தமது வழக்கு விசாரணைகளுக்காக இதுவரை காலமும் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கே வருகை தருகின்றனர். எனினும் மக்களின் போக்குவரத்து உள்ளிட்ட அவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டே துணுக்காய் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts