யுத்தத்திற்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேர் குடியமர்வு!

யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்திற்கும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரத்தின்படி, 42 ஆயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 750 அங்கத்தவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர். கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான மக்கள் மீள்குடியேறியுள்ளனர். இதன்பிரகாரம்...

இராணுவ அம்பியுலன்ஸ் மோதி ஒருவர் பலி

முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் இராணுவத்தினர் பயணித்த அம்புலன்ஸ் வண்டி, துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார். வற்றாபளை பகுதியிலிருந்து முள்ளியவளைநோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, பின்னால் வந்த கேப்பாபுலவு இராணுவ முகாமின் இராணுவ அம்புலன்ஸ்வண்டி மோதியது. இன்று புதன்கிழமை காலை (28) இடம்பெற்ற இச்சம்பவத்தில் வற்றாப்பளையைச் சேர்ந்த...
Ad Widget

பிரபாகரன் இன்று இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்

எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

கருணை காட்டுங்கள்! கிளிநொச்சியில் கதறும் உறவுகள்

தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என, அவர்களது பெற்றோர் மற்றும் மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் இன்று (27) கிளிநொச்சியில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் பெண்ணொருவர் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில்...

முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்டுவந்த மகாத்மா காந்தி சிலை உடைப்பு!

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இந்திய நாட்டின் அகிம்சாவாதியான மகாத்மா காந்திக்கான நினைவுச்சிலை அமைக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் காலையில் அந்தச் சிலை உடைந்துவிழுந்த நிலையில் காணப்பட்டிருக்கின்றது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில் முல்லைத்தீவு...

தமிழர்களின் இருப்பை தக்கவைக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கே உண்டு: சுரேஸ்

எமது சமுதாயத்தின் இருப்பை பாதுகாத்து தக்கவைக்கும் பாரிய பொறுப்பு இளைஞர் யுவதிகளிடமே உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து வெளிநாட்டு மோகம் காரணமாக வெளிநாடுகளை நோக்கி படையெடுப்பதானது, எதற்காக போராடினோம் என்ற கேள்வியை ஏற்படுத்துமென அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி உருத்திரபுரம் உழவர் ஒன்றிய சனசமூக...

நத்தார் தினத்தில் வறுமையில் வாழும் முதியவர்களுக்கு, பெண்களின் உள்ளாடைகளை வழங்கிய கொடை வள்ளல்கள்!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் நேற்று 25-12-2016 நத்தார் தினத்தில் முதியவர்களுக்கு பொதிகள் வழங்ப்படுவதாக அறிவித்து அந்த கிராமத்தில் வாழ்கின்ற 136 முதியவர்களை அங்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனர். காலை பத்து மணிக்கு குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இயலாத நிலையிலும் பொது நோக்கு மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனர். கிராமத்தின் முதியோர் சங்கமும், வெளியில்...

நாளை முல்லைத்தீவில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. செம்மலை மகா வித்தியாலயத்தில் நாளை திங்கட்கிழமை (26.12.2016) பி.பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...

மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...

புதுக்குடியிருப்பு கடலிலிருந்து விமானத்தின் உதிரி பாகங்கள் மீட்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி புதுக்குடியிருப்பு கடலில் சிதைவடைந்த விமானத்தின் உதிரி பாகங்கள் சிலவற்றை கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்த சிதைவடைந்த உதிரிப்பாகங்கள் ரஷ்ய போர் விமானத்தின் உதிரிப்பாகங்களாக இருக்கலாமென்று நம்பப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மாலை புதுக்குடிருப்பு கடலில் 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்த பாகங்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக இவற்றை...

மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என உறவினா்கள் தெரிவிக்கின்றனா். தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமாா் வானுஜா வயது 17...

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் ஆரம்பம்

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் நேற்று 20-12-2016 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகாில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது. நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள்...

வன்னி மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான விசேட பணிப்பாளராக பிரபா கணேசன்!

ஜனாதிபதி மைத்திரிபால சி​றிசேனவினால், வன்னி மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான விசேட பணிப்பாளராக, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயகோனினால், ​இன்று (20) காலை வழங்கப்பட்டது.

மூளைக் காச்சலால் ஐந்து வயது குழந்தை மரணம்

கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஐந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் 18-12-2016 மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச்சோ்ந்த விஜயராஜ் விஸ்னுஜன் என்ற குழந்தையே மூளைக்காச்சல் காரணமாக இறந்துள்ளது.சில நாட்களாக காச்சலும் வாந்தியும் காணப்பட்டதாகவும் பின்னா் கடந்த ஞாயிற்று கிழமை மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட...

த.தே.கூட்டமைப்பினர் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ய கோரிக்கை!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும் மதிப்பவா்களாக இருந்தால் 31 ஆம் திகதி பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் போராட்டத்தை மதிக்கிற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் மதிக்கிறவா்களாக இருந்தால், இந்த மண்ணுக்காக தங்கள் உயிர்களை விட்ட ஆயிரக்கணக்காக இளைஞா் யுவதிகள்...

பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு என்ற தொனிப்பொருளில் இன்று காலை 8.30 அளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம், ஆரம்பமாகியுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65...

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் பெண்களின் பிரதிநிதி கதிர்செல்வம் கருணாநிதி தெரிவித்தார். பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்தல், நல்லிணக்க வழிமுறையின் முன்னேற்றப் பாதை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு ரில்கோ ஹோட்டலில்...

215 குடும்பங்களில் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய்!

வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்களின் நிலக்கீழ் நீர் விரைவாக கல்சிய அதிகரிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் போரில் அழிந்தது போக மிகுதியாக ஊர் திரும்பியவர்களை சிறுநீரக நோய் அரிக்கின்றது. உதாரணத்திற்கு வவுனியா வடக்கில் இருக்கும் கற்குளம் கிராமத்தை எடுத்துக்கொள்வோம். நெடுங்கேணி பிரதேச சபைக்கு கீழ் உள்ள கிராமங்களில் கற்குளம் கிராமமும் ஒன்றாகும். தனி கிராம சேவகர் பிரிவாக...

பொருத்து வீட்டுத்திட்டத்தை எதிர்த்து போராட்டம்

பொருத்து வீட்டுத்திட்டத்துக்குகு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடைய நிதிப்பங்களிப்புடன் நிரந்தர வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் 13,000...

முல்லைத்தீவில் பெரும்பான்மையை இழக்கும் தமிழ் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்குவதற்கான அடித்தளங்கள் இடப்பட்டு வருகின்றன. மக்களிருக்கும் நிலங்களை...
Loading posts...

All posts loaded

No more posts