இரண்டு வாரங்களுள் கிளிநொச்சி பொதுச்சந்தை தீவிபத்துக்கான இழப்பீடு வழங்கப்படும்! வடக்கு ஆளுநர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காணிப்பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு நேற்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் விசாரணையொன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் 125 காணிப்பிணக்குகள் வடக்கு மாகாண ஆளுநரால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன்போது வடமாகாண ஆளுனர், ஆளுனர் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட...

மாற்றுக் காணிகளை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட 42 குடும்பங்களின் காணிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட மாற்றுக் காணிகளை தாம் வாங்கப்போவதில்லையென அக்குடும்பங்கள் தெரிவித்துள்ளனர். தம்மால் கையகப்படுத்தப்பட்ட 59 குடும்பங்களின் காணிகளை விடுவிப்பதாகவும் ஏனைய 42 குடும்பங்களுக்குரிய காணிகளை தாம் வழங்கப்போவதில்லையென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Ad Widget

250 கிலோகிராம் எடையுடைய வெடிக்காத குண்டு மீட்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் 250 கிலோகிராம் எடையுடைய விமான குண்டு ஒன்று, விமான படையால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து, இந்த குண்டு கண்டுபிடிப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றிக் கொண்டிருந்த பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, விமான படையினர் வரவழைக்கப்பட்டு குண்டு...

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை மாலை 5 மணியளவில் பனிக்கன்குளம் பகுதியில் வீதிகடமையில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி...

குளத்தில் மூழ்கி சகோதரிகள் பலி

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி 17 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளான சிறுமிகள் இருவர், நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளனர். 17 வயதுடைய சிறுமிக்குக் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. குறித்த சிறுமி, சிறுமியின் கணவர் மற்றும் சிறுமியின் சகோதரி, மற்றொருவர் என நால்வர் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தைப் பார்ப்பதற்குச் சென்றுள்ளனர். அங்கு...

முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்பு பெட்டகங்கள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கரைதுறைப்பற்று பொதுச்சந்தை பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் சந்தை ஒன்றை பிரதேச சபை அமைக்கும் பணியில் கிடங்கு வெட்டும் போது குறித்த பெட்டகங்கள்கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து நேற்று பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் பிரதேச சபையினரின்...

உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 07-12-2016 புதன் கிழமை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆனையிறவு...

பரீட்சைக்கு தோற்றிய மாணவிகள், ஃபர்தா அணிய கூடாது என கூறியதால் சர்ச்சை

முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லீம் மாணவிகளுக்கு ஃபர்தா அணியக் கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் ஏனைய அதிகாரிகள் பணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படடுள்ளது. பரீட்சை மத்திய நிலையமாக செயற்படும் தண்ணீற்று முஸ்லீம் மகா வித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளே இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்தாவை அகற்ற மறுத்தால் சுட்டெண்களை பரீட்சை...

மின்சார வசதியைப் பெற்றுத்தருமாறு கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிரம்படிக் கிராமத்தில் மின்சார வசதியை ஏற்படுத்தித்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2009 ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு அங்கிருந்து அழைத்து வரப்பட்டனர். எனினும் இவ்வாறு அழைத்து வரப்பட்ட கேப்பாப்புலவு மக்கள், அவர்களது சொற்த இடங்களில் குடியமர்த்தப்படாது...

மைத்திரி ஆட்சியிலேயே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்: அங்கஜன்

நாட்டில் காணப்பட்ட புரிந்துணர்வின்மையே பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருந்ததென குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தற்போதைய தேசிய அரசாங்கத்திலேயே தமிழர்களுக்கு நிச்சயமாக தீர்வு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அதிகார சபை அங்குரார்ப்பணம் மற்றும் உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்வில்...

கிளிநொச்சியில் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை

கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (வயது 62) என்ற விவசாயியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த...

கேப்பாப்புலவில் இராணுவம் வசமிருந்த ஒரு தொகுதி காணி மீள்குடியேற்றத்திற்கு விடுவிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிரதேசத்தில் ஓருபகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மாலை இராணுவ முகாமிற்கு மக்கள் பிரதிநிதிகளை அழைத்த இராணுவத்தினர், கேப்பாப்புலவின் பாடசாலைக்கு எதிர்ப்பக்கமாக உள்ள பகுதிகளில் மக்கள் மீள்குடியேற முடியும் என இராணுவத்தினர் தெரிவித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்ட...

ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தால் ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை விடுவிக்க தயார் : வன்னி இராணுவ தளபதி

ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அறிவித்தல் விடுத்தால் வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை விடுவிக்கத் தயாரென வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார். வன்னி இராணுவ கட்டளை தளபதியுடன் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கடந்த புதன்கிழமை சந்திப்பொன்றை...

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும். அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும்...

நாடா புயலினால் முருகானந்தா கல்லூரி கட்டிடம் முற்றாக சேதம்

நாடா" புயல்காற்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில், இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் காலை எட்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தவேளை பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. தரம் ஆறு...

ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலம் துண்டிக்கப்படும் அபாயம்

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள, ஒடுக்கு பாலத்திற்கு பதிலாக நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் தற்போது இவ்வருட நடுப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேவேளை மக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு மாற்று...

மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு நல்லின ஆடுகள் அமைச்சர் ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்!

முல்லைத்தீவில் மாங்குளம் - துணுக்காய் வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சால் நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை (30.11.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நல்லின யமுனாபாரி ஆடுகளை வழங்கி வைத்துள்ளார். வடமாகாண கால்நடை அபிவிருத்தி...

கிளிநொச்சி விபத்தில் 14 பேர் படுகாயம்!

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றை தனியார்பஸ் ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.குறித்த விபத்தில் தனியார் மினிபஸ்சில் பயணித்த 14 பேர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில்...

முல்லைத்தீவு நீரியல்வள திணைக்களத்தில் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் திணைக்கள வளாகத்தில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரை வீதியிலுள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று லட்சம் ரூபா பெறுமதியிலான மோட்டார் சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த நிலையில்...

முழங்காவில் துயிலுமில்லத் துப்பரவுப் பணியில் ஈடுபட்ட மக்கள்

கிளிநொச்சி முழங்காவிலில் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் நேற்றுமாலை நடைபெற்றுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ள அவர்களும் கலந்துகொண்ட இந்தத் துப்பரவுப் பணியில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்பரவும் செய்யும் பணிகள் நேற்று காலை கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை முழங்காவில் துயிலுமில்லத்தில் துப்பரவுப் பணிகள்...
Loading posts...

All posts loaded

No more posts