Ad Widget

மூளைக் காச்சலால் ஐந்து வயது குழந்தை மரணம்

கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஐந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் 18-12-2016 மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச்சோ்ந்த விஜயராஜ் விஸ்னுஜன் என்ற குழந்தையே மூளைக்காச்சல் காரணமாக இறந்துள்ளது.சில நாட்களாக காச்சலும் வாந்தியும் காணப்பட்டதாகவும் பின்னா் கடந்த ஞாயிற்று கிழமை மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழந்தையை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவந்துள்ள நிலையில் ஏற்கனவே குழந்தை இறந்தே காணப்பட்டதாக வைத்தியசாலையினா் தெரிவிக்கின்றனா்

உடற்கூற்று பாிசோதனையை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியும், திடீர் மரணவிசாரணையை மரணவிசாரணை அதிகாரி திருலோகமூர்த்தியும் மேற்கொண்டுள்ளனர் பின்னா் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts