Ad Widget

முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்பு பெட்டகங்கள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கரைதுறைப்பற்று பொதுச்சந்தை பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

box-mullai

இந்தப் பகுதியில் சந்தை ஒன்றை பிரதேச சபை அமைக்கும் பணியில் கிடங்கு வெட்டும் போது குறித்த பெட்டகங்கள்கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து நேற்று பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் பிரதேச சபையினரின் உதவியுடன் நிலத்தை அகழ்ந்து குறித்த பெட்டகங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

Related Posts