Ad Widget

பிரபாகரன் இன்று இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்

எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடும் போது,

வடமராட்சி என்றால் படிப்பில் மிகவும் பெயர் பெற்ற ஒரு இடம். உங்களுக்குத் தெரியும் எங்களுடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வல்வெட்டித்துறை. அவர் எப்படி இருந்தார். இன்றைக்கு இருக்கின்ற எங்களுடைய ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் பிரபாகரன் போல் ஒரு தலைவரை எடுக்கவே முடியாது.

இன்று அவர் இருந்திருந்தால் அரசாங்கத்தில் பிரதமராகவோ, ஒரு உறுப்பினராகவோ இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு துரதிஸ்டவசமாக அது கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்த அழிவை மகிந்த ராஜபக்ஸ முடித்து வைத்ததாக இங்கு சில அரசியல்வாதிகள் பேசுகின்றனர். ஆனால் அவ்வாறு இனவாதம் பேசுவதனால் எங்களுக்கு கிடைப்பதும் கிடைக்காது போய்விடும்.

இப்படி இனவாதம் பேசாது இந்த நல்லாட்சி அரசின் மூலம் எதை பெற்றுக்கொள்ள முடியும் எதை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தெற்கிலும் சரி வடக்கிலும் சரி இனவாதம் பேசுவதனால் எமது சந்ததிதான் பாதிப்படைகிறது. எமது நல்லாட்சியில் மக்களுக்கான நல்ல விடயங்களே இடம்பெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

Related Posts