Ad Widget

புதுக்குடியிருப்பு கடலிலிருந்து விமானத்தின் உதிரி பாகங்கள் மீட்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி புதுக்குடியிருப்பு கடலில் சிதைவடைந்த விமானத்தின் உதிரி பாகங்கள் சிலவற்றை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இந்த சிதைவடைந்த உதிரிப்பாகங்கள் ரஷ்ய போர் விமானத்தின் உதிரிப்பாகங்களாக இருக்கலாமென்று நம்பப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை மாலை புதுக்குடிருப்பு கடலில் 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்த பாகங்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக இவற்றை கடற்படையினர் நேற்றுக்காலை மீட்டமை குறிப்பிடத்தக்கது

கரைக்கு கொண்டு வரப்பட்ட உதிரிப்பாகங்கள் இராணுவம் மற்றும் பொலிஸ் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலையிலுள்ள விமானப்படைதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related Posts