- Sunday
- June 22nd, 2025

முப்படைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை தமிழ் பேசும் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. முப்படைகளுக்கு பொலிசாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த 2ஆம் திகதி வர்த்தமானியில் அறிவித்தல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த அறிக்கையிலேயே...

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலான பிரேரணையின் தீர்மானத்தை மீளப்பெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கான அதிகாரங்கள் மாகாணசபைக்கு இல்லையென்பதால் இவ்வாறான விதிமுறைகளுக்குப் புறம்பான செயற்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள தேசிய அரசின் நல்லிணக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே...

யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் என்ற குழு ஏற்பாடு செய்துள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு - வௌ்ளவத்தை...

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டாமென முன்பு எதிர்த்தவர்கள், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென கோருவது, ஆரோக்கியமான மாற்றம் என, கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்...

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது, என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என சுட்டிக்காட்டும் வகையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வரவேற்றுள்ளதுடன், முதலமைச்சரின் துணிச்சலை பாராட்டுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இன்றைய தினம் மாலை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்....

வடமாகாணசபையில் இனப்படுகொலை பிரேரணையை முன் வைத்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆற்றிய முழுமையான உரை கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்த்தரப்புத் தலைவர் அவர்களே, கௌரவ மாகாணசபைப் பிரதிநிதிகளே, கௌரவ சிவாஜிலிங்கத்திற்குச் சென்ற வருட கடைசி மாதக் கூட்டத்தில் ஒரு உறுதிமொழி அளித்திருந்தேன். அதாவது போதிய தரவுகள் தரப்பட்டால் நானே குறித்த இனப்படுகொலை பற்றியதான பிரேரணையைத்...

யாழ்.சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்றைய தினம் குறித்த பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், நீர் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர். இன்றைய தினம் காலையிலேயே உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் இடங்களிலிருந்து நீர் மாதிரிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்....

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியிலிருந்த எங்கள் கோயில்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் குடியிருந்த வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன என மயிலிட்டி மக்கள் பிரதிநிதி ஒருவர் கவலை தெரிவித்தார். யாழ். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 'இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள்' கலந்துரையாடல் நாவலர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை(04) இடம்பெற்றபோது, அவர்...

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் முன்றலில் வியாழக்கிழமை (05) நடத்தினார். ஆர்ப்பாட்டக்காரர்கள், 'எண்ணெய் கசிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தரவேண்டும்', 'எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அனர்த்த பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும்', 'மக்களை முட்டாளாக்காதே',...

தமிழ்த் தேசியக் கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக முன்னாள் ‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், மலரும் இணையத்தள உடக ஆசிரியரும் தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவருமான நடேசபிள்ளை வித்தியாதரன் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியொன்று வடக்கில் மலர இருப்பதாக நம்பகரமாகத் தெரியவருகிறது. முன்னாள் போராளிகளாக இருந்து தமிழ்த் தேசிய உரிமைகளுக்காகப்...

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அவ்விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக...

உயர்பாதுகாப்பு வலையமாக கையகப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களுடைய காணிகளில் ஒரு தொகுதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு யாழ்.அரசாங்க அதிபராக இருந்து திருமதி இமெல்டா சுகுமார் உச்ச நீதிமன்றத்தில் அனுப்பிவைத்த சிபார்சின் அடிப்படையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 கிரம சேவகர்...

இலங்கை மின்சார சபையின் நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் நொதர்ன் பவர் நிறுவனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைப்பதுடன் மறு அறிவித்தல் வரும்வரை...

உலகின் முதல்தர சமூக வலைத்தளமான முகப்புத்தகம் என்றழைக்கப்படும் Facebook தளம் சற்றுமுன்னர் முடங்கியது ”. "Sorry, something went wrong. We're working on getting this fixed as soon as we can." என்ற செய்தி வருவதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். முகப்புத்தகம் 1.32 பில்லியன் மாதாந்த பயனாளர்களை கொண்டமை குறிப்பித்தக்கது.

விளையாடிக் கொண்டிருந்தவேளை இராணுவ முகாமிற்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்றவரை இராணுவத்தினர் கடுமையாக தாக்கியதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வல்வெட்டித்துறை எள்ளங்குளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை இராணுவ முகாமுக்குள் பந்து சென்றுவிட்டது. அதனை எடுப்பதற்கு சென்ற...

மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் தமிழரசுக் கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கிலும் கட்சியின் முடிவென்ற பெயரில் இம்மாதம் 3ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முடிவுக்கு மாறாக, மைத்திரிபால சிறிசேனவுக்கு வெளிப்படையாக...

தற்காலிக, அமைய ( நாளாந்த),பதில் கடமை, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 2015 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக நிரந்தர பதவியினை வழங்குதல் தொடர்பில் 2014.11.12 ம் திகதிய அரசாங்க சுற்றறிக்கை யின் படி (http://www.pubad.gov.lk/web/eservices/circulars/2014/T/25_2014(i)(t).pdf) சகல திணைக்களங்கள் மாகாணசபைகள் கூட்டுத்தாபனங்களில் இருந்து விபரங்கள் கோரப்பட்டிருந்த போதிலும் வடமாகாண அரச நிறுவனங்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்த...

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. 92 ஒக்ரின் பெற்றோல் 117 ரூபாவாகவும் , 95 ஒக்ரின் பெற்றோல் 128 ரூபாவாகவும், டீசல் 95 ரூபாவாகவும், மண்ணெண்ணை 65 ரூபாவாகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும்...

All posts loaded
No more posts