நீதிமன்ற உத்தியோகத்தரிடம் சங்கிலி அறுக்க முயற்சி!

யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் (சிறுவர் நீதிமன்றம்) பணியாற்றும் பெண் உத்தியோகத்தரிடம் சங்கிலி பறிக்கும் முயற்சி அவரின் சாதூரியத்தால் தடுக்கப்பட்டது. சங்கிலி பறிப்பைத் தடுத்த அந்த பெண் உத்தியோகத்தர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள மேலதிக நீதிவான்...

பாதாள உலகக் குழுக்களை போன்று ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள் அல்ல! – சட்டம் ஒழுங்கு அமைச்சர்

தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள குழுக்களை போன்று வடக்கில் இயங்குகின்ற ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள் அல்ல என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தெரிவித்தாவது- தென் மாகாணங்களில் பாதாள...
Ad Widget

யாழ் நீர்வேலி வாள்வெட்டு: இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் வைத்து கடந்த மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 24 மற்றும்...

தமிழ் தலைவர்களின் அகந்தையே அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம்: முதலமைச்சர்

தமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திக்க காரணம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “30...

யாழில் சீன ஆய்வாளர்கள் அகழ்வுப் பணியில்!

யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதியில் சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியதாக தெரிவித்து, சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன், இணைந்து இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பின் அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த சீனக் கப்பலொன்று விபத்திற்கு உள்ளாகி மூழ்கியதாகவும்,...

முல்லைத்தீவு வாடிகள் எரிப்பு சம்பவம் : வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது

முல்லைத்தீவு - நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின்  வாடிகள்  எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக  முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவரே  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி கடற்றொழிலில் ஈடுபட்ட 27 வெளி மாவட்ட மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

யாழ். பல்கலையில் செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவேந்தல்!!

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. பல்கலைகழக கல்விசார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். 2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்படையின்...

மீன்பிடித் தொழிலை நம்பியே எமது வாழ்வாதாரம் உள்ளது: நாயாறு மீனவ குடும்பத்தினர்

எமது பிள்ளைகளின் கல்வி, வாழ்வாதாரம் அனைத்தும் இந்த மீன்பிடித் தொழிலை நம்பியே உள்ளது என முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நாயாறு பகுதியின் உள்ளூர் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக குறித்த மீனவ குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்....

வடக்கு, கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள அரச மற்றும் பொதுமக்களின் 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,...

செஞ்சோலையில் பாலகர்களை கொன்று குவித்த கொடிய தினம் இன்று!!

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானப்படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி ஒன்றும் அறியாத பச்சை பாலகர்களை கொன்று குவித்த கொடிய நாள் இன்றாகும். இக்கொடிய தினத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது,...

வாள்வெட்டு குழுவினரால் பேருந்து ஒன்று தீவைத்து எரிக்க முயற்சி!!

அச்சுவேலி வடக்குப் பகுதியில், தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தனியார் பேருந்து அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்தின் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர்,...

வட மாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் – ஆளுனர் ரெஜினோல்ட் குரே

வட மாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே வலியுறுத்தியுள்ளார். அதன் ஊடாகவே தற்போது வட மாகாண அமைச்சர்கள் சபையில் நிலவுகின்ற சிக்கலான நிலைமைக்கு இலகுவாக தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவின் ஊடாக பா.டெனீஸ்வரனும் அமைச்சர் என்றே...

குள்ள மனிதர்களின் பின்னணியில் யார்? வெளிப்படுத்தப்படவேண்டும் – பேராயர் தியாகராஜா

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் குள்ள மனிதர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் உடடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர், கலாநிதி டேனியல் தியாகராஜா தெரிவித்தார். மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். யாழில், தற்போது குள்ள மனிதர்கள் தொடர்பிலான அச்சம்...

யாழ் குடாநாட்டில் திடீர் சுற்றிவளைப்பு: 29 பேர் கைது!

யாழ், குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய், ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட, திடீர் சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “வடக்கில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கு, பொலிஸாரும் இராணுவத்தினரும்...

நிலமீட்பு போராட்டத்தில் யாரையும் நம்பப்போவதில்லை: கேப்பாப்பிலவு மக்கள்!

தமது சொந்த நிலத்தினை மீட்பதற்கு இனிமேல் யாரையும் நம்பப்போவதில்லை என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம் 533 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,”எமது போராட்டம் 500 ஆவது...

வடக்கில் நுண்கடன் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு: மாவை

யாழ் பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக, மீண்டும் அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) பிரதேச செயலக கேட்போர் கூட த்தில் இடம்பெற்ற போதே, அவர்...

புத்தளத்தில் கரையொதுங்கிய இந்திய மருத்துவ கழிவுப்பொருட்கள் தொடர்பில் ஆய்வு!

புத்தளம் கடற்பரப்பில் ஒதுங்கியுள்ள இந்திய மருத்துவ கழிவுபொருட்கள் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது. புத்தளம் கரையோர பகுதிகளான கண்டத்தீவு, சின்னப்பாடு, பெரியபாடு மற்றும் பள்ளிவத்தபாடு ஆகிய பிரதேசங்கள் உள்ளிட்ட இன்னும் பல பிரதேசங்களில் அண்மைய நாட்களாக மருத்துவ கழிவுப்பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன. இவை தொடர்பாக மக்கள் சந்தேகம்...

முல்லைத்தீவில் மீன் வாடிகள் எரிப்பு: படையினர் குவிப்பு

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் உள்ளூர் மீனவர்களுக்குச் சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தென்னிலங்கை மீனவர்கள் சிலர் முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்....

காசோலை மோசடியில் சிக்கிய முன்னணி உறுப்பினர்!!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநாகர சபை உறுப்பினர் ஒருவர் சபையின் ஐ.தே.கட்சியின் உறுப்பினரிடம் நம்பிக்கை அடிப்படையில் பின்திகதியிடப்பட்டு பெற்றுக் கொண்ட காசோலையை பயன்படுத்தி 2 லட்சம் ரூபாவினை கையாடல் செய்ய முற்பட்டதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த உறுப்பினர் பணத்தினை மீளச் செலுத்திய நிலையில் முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர...

அதிக புள்ளிகளை பெற்றும் நியமனம் இல்லை! – இந்திய கல்வி காரணமா?

அபிவிருத்தி உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு அதிக புள்ளிகளை பெற்றும், தமக்கு நியமனம் வழங்கப்படவில்லையென வவுனியா இராசேந்திரங்குளம் மற்றும் மகறம்பைகுளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சத்தியமூர்த்தி யசிதரன் மற்றும் வேணி என்ற இரு பட்டதாரிகளும் தெரிவித்துள்ளனர். கடந்த 4ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு சகல பரீட்சைகளிலும்...
Loading posts...

All posts loaded

No more posts