Ad Widget

வடக்கு, கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள அரச மற்றும் பொதுமக்களின் 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts