Ad Widget

யாழில் சீன ஆய்வாளர்கள் அகழ்வுப் பணியில்!

யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதியில் சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியதாக தெரிவித்து, சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன், இணைந்து இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பின் அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த சீனக் கப்பலொன்று விபத்திற்கு உள்ளாகி மூழ்கியதாகவும், அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீன நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உள்நாட்டு போர் காரணமாக அகழ்வாராய்ச்சி நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் இதற்கான அனுமதி பெறப்பட்டதோடு, இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts