‘அரசையும் ஆட்சியாளர்களையும் குறைகூறுவதே த.தே.கூ.வின் வழக்கம்’ – டக்ளஸ்

எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அதற்கான சூழலை உருவாக்கி கொள்ளும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையுடனும் நேர்மையான அணுகுமுறையையும் கொண்டிருக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டுள்ளார். காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருகின்ற அரசையும் ஆட்சியாளர்களையும் எதிர்ப்பது மட்டுமன்றி, தமது சுயலாப...

மரண வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தோரில் நால்வர் கைது

கோண்டாவில் பகுதியில் மரண சடங்கு நடைபெற்ற வீட்டுக்குள் புகுந்து கடந்த புதன்கிழமை (18) தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றத்துக்காக கோண்டாவில் பகுதியை சேர்ந்த நான்கு பேரை நேற்று திங்கட்கிழமை (23) சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் மரணச் சடங்கு இடம்பெற்று சடலத்தை தகனம் செய்யும் பொருட்டு...
Ad Widget

தங்க திரிசூலத்தில் வெள்ளிக்காசு காணிக்கை செலுத்தினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , தங்கத்தினால் செய்யப்பட்ட ஆறு அங்குலம் உயரமான திரிசூலம் ஒன்றில் வெள்ளி காசு ஒன்றை கட்டி காணிக்கையாக செலுத்தியுள்ளார். நேற்று திங்கட்கிழமை காலையில் இருந்த சுபநேரமான 8.12க்கே அவர் இவ்வாறு காணிக்கை செலுத்தி தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கதிர்காமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று,...

ஏனைய கடமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பேரணிக்கு ஆதரவு வழங்குங்கள்; த.தே.கூ

ஐ.நா சபையின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரி பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளவுள்ள மாபெரும் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா சபையில் விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்தநிலையில் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. எனவே விசாரணை அறிக்கையை...

கனேடிய தூதுவர் அரச அதிபர் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் செலி விடிங் யாழ்.வருகை தந்து யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடினார். நேற்று காலை 11 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திலுள்ள தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக கனடா அரசால் ஏதேனும் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வியையும் எழுப்பினார். அதற்கு அரச அதிபர்...

தமிழ்க் கைதிகளை விடுதலை செய்ய புதிய அரசாங்கமும் தயங்குகிறதா?

இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் புதிய அரசாங்கமும் தயக்கம் காட்டி வருவதாக தமிழ்த் தலைவர்களை மேற்கோள்காட்டி விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் வரும் மார்ச் மாதமளவில் இறுதிப் பெயர்ப் பட்டியல் தயாராகிவிடும் என்றும் நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு...

காக்கி சட்டை கலவர சட்டையாகிறதா?

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் காக்கி சட்டை படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் படம் வெளியாகும் முன்னர் படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் சண்டை என்ற செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் கூட நடந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் வந்ததும், தனுஷ் வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி வந்தது. அச்செய்திகளை குறித்து சிவகார்த்திகேயனும் எங்களுக்குள் எந்த...

பிரபல இயக்குநர் ஆர்சி சக்தி மரணம்

ரஜினி, கமல் போன்ற முக்கிய நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஆர் சி சக்தி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76. ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம், கமல் ஹாஸனை வைத்து உணர்ச்சிகள், லட்சுமி நடித்த தவம், வரம், ரகுவரன் நடித்த கூட்டுப் புழுக்கள், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்...

யாழ்.பல்கலை சமூகத்தின் போராட்டத்திற்கு அணைவரும் அணிதிரள்க ! – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

யாழ் பல்கலைக்கழக சமூகம் நடாத்தும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதுடன் அதில் அணைவரும் அணிதிரண்டு கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் வெளியிட்ட அழைப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐநா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட...

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்துக்கு யாழ். வர்த்தக சங்கமும் ஆதரவு

ஐ.நா விசாரணையை தாமதமின்றி வெளியிடக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் செவ்வாய்க்கிழமை (24) நடத்தப்படவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு யாழ்.வர்த்தக சங்கமும் ஆதரவு தெரிவிப்பதாக வர்த்தக சங்கத்தலைவர் இ.ஜெயசேகரம் இன்று (23) தெரிவித்தார். பல்கலைக்கழக சமூகத்தினரால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு வர்த்தக சங்கத்தின் ஆதரவு குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,...

சுமந்திரனின் கொடும்பாவி எரிப்புக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – சுரேஸ் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரனின் கொடும்பாவி, வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக சனிக்கிழமை(21) எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். காணாமற் போனோர் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்...

நியாயமான எமது போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுங்கள் – பல்கலைக்கழக சமூகம்

ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து இணைந்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. பேரணி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் நேற்று யாழ்....

பல்கலைக்கழக போராட்டத்துக்கு வலிகாமம் தெற்கு வர்த்தக சம்மேளனமும் ஆதரவு

போர்க்குற்ற விசாரணை அறிக்கையை உடன் வெளியிடுமாறு சர்வதேசத்தை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தாலும் வெகுஜன அமைப்புகளாலும் செவ்வாய்க்கிழமை (24) காலை 9.30 மணிக்கு நடத்தப்படும் அஹிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு வலிகாமம் தெற்கு வர்த்தக சம்மேளனம் தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் லயன் சி.ஹரிகரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ள...

உள்ளக விசாரணை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஸ்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப் படுகொலைகள் தொடர்பாக புதிய அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வடமாகாண சபை உறுப்பினர் சி.சிவமோகனின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

செல்வச்சந்நிதி ஆலய மடத்திலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய மடத்திலிருந்து 70 வயது மதிக்கத்தக்கவரின் சடலத்தை திங்கட்கிழமை (23) காலை மீட்டதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் கூறினர். ஆலய மடத்தில் தங்கியிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவரின் பெயர் விபரங்கள் இன்னும் தெரிவியவரவில்லை. சடலம் மீட்கப்பட்டு ஊறணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் விட்டுச் சென்றதே கூட்டமைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் தீர்க்கதரிசனத்துடன் தமிழர்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய அமைப்பாக மாபெரும் ஜனநாயக சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு சென்றுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படும் சாத்தியம்

இலங்கை-இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை பிற்போடுமாறு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி சென்னையில் நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. தமிழக மீனவர்களின் இழுவை படகுகளே இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினையாக காணப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய அரசாங்கம் முன்வைத்த மாற்றுத் திட்டம் குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருகின்ற...

ஆஸ்கர் விருது: சிறந்த நடிகராக எடி ரெட்மேன் ; சிறந்த நடிகையாக ஜூலியானே மூரே தேர்வு

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட் திரையுலகில், மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக, பல்வேறு நாடுகளிலிருந்து திரைநட்சத்திரங்கள் அங்கு குழுமியிருந்தனர். தி கிராண்ட் புத்தா பெஸ்ட் ஓட்டல் என்ற திரைப்படம்,...

பல்கலை போராட்டத்துக்கு சைவ மகா சபை ஆதரவு!

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சைவ மகா சபை பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும் இழப்புகளுடன் வாழ்கின்ற மக்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பது அவசியம் என்று தெரிவித்த மேற்படி சபை காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதி...

வெகுஜன போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க தமிழ் சிவில் சமூக அமைப்பு தீர்மானம்!

யாழ்.பல்கலைகழக சமூகத்தின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் சிவில் சமூக அமைப்பு, நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நடதத் தீர்மானித்துள்ளது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பிலேயே மேற்படி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...
Loading posts...

All posts loaded

No more posts