Ad Widget

வடக்கு – தெற்கு மக்களிடையே சுமுகநிலை விரைவில் உருவாக்கப்படவேண்டும்! – ஜனாதிபதி

தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரளவேணடும். போர் முடிவுக்கு கொணடுவரப்பட்டாலும் வடக்கு, தெற்கு சமூகங்களிடையே சுமுக நிலை உருவாக்கப்படுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கின்றன. -இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் இன்று காலை 9.30க்கு ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு சுதந்திர...

72 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை சுதந்திர தினத்தில் தமிழ் தலைவர்!

1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை. இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். இலங்கையின் 67...
Ad Widget

காணாமற்போனோரின் கண்ணீரே மஹிந்தவின் ஆட்சியை கலைத்தது

கண்ணகி சிலம்பை வைத்து மதுரையை எரித்தது போல, காணாமற்போனோர் தங்கள் குழந்தைகளுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சிந்திய கண்ணீரே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை இல்லாமல் ஆக்கியதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பொது நூலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற புதிர் எடுத்து பொங்கல் நடத்தும் விழாவில்...

பொருளாதார, மத ரீதியிலான மாற்றங்கள் ஏற்படும்

எதிர்வருங் காலங்களில் நடைபெறும் சுதந்திர தினத்தில் பொருளாதார மற்றும் மத ரீதியான மாற்றங்கள் ஏற்படும் என நம்புவதாக யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற இலங்கையில் 67 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு...

வழிபாடுகளில் கலந்துகொள்ள இராணுவம் அனுமதி

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள பலாலி இராஜஇராஜேஸ்வரி ஆலயத்தில் தைப்பூச திருநாளான செவ்வாய்க்கிழமை (03) பொதுமக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட இராணுவத்தினர் அனுமதியளித்தனர். இராணுவ சோதனை சாவடியில் இருந்து இராணுவத்தினரின் பஸ்கள் மூலம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். பொதுமக்களுடன் இணைந்து யாழ். மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்,...

முதியோர்களுக்கான கண்வில்லைகள், பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்கப்படும்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தால் வறிய நிலையில் வாழும் முதியோர்களுக்கு வழங்கப்படும் இலவச கண்வில்லைகள், எதிர்காலத்தில் உரிய பிரதேச செயலாளர் ஊடாக முதியவர்களுக்கு வழங்கப்படும் என செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த இலவச கண்வில்லைகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பிரதேச...

அசிட் வீசிய வயோதிபருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பூதவராயர் வீதி பகுதியில் வைத்து நபரொருவர் மீது கடந்த திங்கட்கிழமை(02) அசிட் தாக்குதல் மேற்கொண்ட வயோதிபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை(03) உத்தரவிட்டார். இந்த அசிட் தாக்குதலில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பொன்னுத்துரை கமலநாதன்(வயது 45) என்பவர் படுகாயமடைந்த யாழ். போதனா...

வீணைக்கு வழங்கும் ஆணையே விடிவை தரும் – டக்ளஸ்

எதிர்வரும் காலங்களில் நாம் எமது கட்சியின் சின்னமாகிய வீணைச்சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும், வீணைக்கு வழங்கும் ஆணையே விடிவை தரும் என்ற மக்களின் நம்பிக்கைக்கு மேலும் உரமூட்டுங்கள் என்றும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கட்சி முக்கியஸ்தர்களுடனான விசேட கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ்...

மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு

பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் சி.பரந்தாமன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி...

விவசாய காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை

இராணுவம் பயன்படுத்திவரும் விவசாய நிலங்களை, மக்களுக்கு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தில் அமைக்கப்பட்ட நெல்லியடி மரக்கறிச் சந்தையை செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும்...

ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்படவில்லை – இராணுவம்

ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னரைப் போலவே ஓமந்தை இராணுவ முகாம் அவ்விடத்தில் இருக்கும். ஆனால் யுத்த காலத்தை போன்று அல்லாமல் அதனை சோதனை நடவடிக்கைகளில் தளர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓமந்தை ஊடாக பொருட்கள்...

பிரதமரின் சுதந்திரதின செய்தி

இன்று, நாம் 67ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு நாகரீகமான அரசியல் கலாசாரம் எமது தாய்நாட்டில் உதயமாகிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்திலேயே கொண்டாடுகின்றோம். இலங்கையின் முதலாவது பிரதம அமைச்சர் தேசபிதா மேன்மை தங்கிய டீ.எஸ்.சேனாநாயக்க அவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையே பிரதான கருவியாகப் பயன்படுத்தினார். அந்தச் சக்தியின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அந்த...

ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி

நாட்டில் ஒரு புதிய நல்லாட்சி யுகம் உதயமாகியிருக்கும் இவ்வேளையில் இந்த 67 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் விசேட முக்கியத்துவம் பெறுகிறது. இது எமது தேசத்தின் சுதந்திரம் மற்றும் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எமது மக்களின் ஐக்கியத்திற்கான புதியதோர் அர்ப்பணத்துடன், மீண்டும் மேலெழுந்துவரும் காலனித்துவ சக்திகளைத் தோற்கடித்து எதிர்காலத்தை நோக்கி புதிய உத்வேகத்துடன் முன்னோக்கிச் செல்லும்...

மீண்டும் விஜய்யுடன் மோத ரெடியாகும் சூர்யா!

விஜய்-அஜித் என இருவரின் படங்களுக்கு தான் எப்போதும் போட்டி இருக்கும். அந்த வகையில் சூர்யா தனக்கென்று ஒரு தனி ட்ராக் அமைத்து அதில் பயணிப்பவர். இந்நிலையில் சில வருடங்களுக்கும் முன் வேலாயுதம், 7ம் அறிவு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது மீண்டும் இவர்கள்...

ஏழு நிமிடங்களை இழந்த இசை

பார்ஸ்ட் ஃபுட் உலகில் இரண்டரை மணிநேரப் படம் என்றாலே ரசிகர்கள் நொருங்குகிறார்கள். ஆனால் இப்போதுதான் கோடம்பாக்கத்தில் மூன்று மணி நேர ஜவ்வு மிட்டாய்களை அதிகமாக தயாரிக்கின்றனர். சென்ற வாரம் வெளியான இசை படமும் 3 மணி நேரம் ஓடுகிறது. சென்டிமெண்ட் காட்சிகள் அதிகம். இந்த அதிகபடி நேரமே படத்தை ரசிக்க முடியாமல் தடுக்கிறது. இதனை லேட்டாக...

அரசின் 100 நாள் திட்டத்திற்கு கமலேஷ் ஷர்மா பாராட்டு

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் ஷர்மா தற்போதைய அரசின் 100 நாள் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று (02) அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடும் போது அவர் பொதுநலவாய அமைப்பின் ஆலோசனைகள் பல 100 நாள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அதனூடாக இலங்கையில் புதிய...

பிரதி அமெரிக்க ராஜாங்க செயலாளர்- ஜனாதிபதி சந்திப்பு

தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான பிரதி அமெரிக்க ராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (02) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதி ராஜாங்க செயலாளர் ஜனாதிபதியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்வைத்துள்ள 100 நாள் திட்டம் குறுகிய நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன....

கூட்டமைப்பைச் சந்தித்தார் நிஷா பிஸ்வால்

இரண்டு நாள் பயணமாக நேற்று இலங்கை வந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்...

வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குள் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, விசேட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் அதன்மூலம் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.பி.என்.பாலசூரிய, செவ்வாய்க்கிழமை(03) தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையப் பிரிவுக்குள் அதிக குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனரா...

நெல்லியடி பொதுச் சந்தை திறப்பு

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 51.963 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நெல்லியடி பொதுச் சந்தையின் மரக்கறி விற்பனைப் பகுதி செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா சந்தையை திறந்து வைத்தார். கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts