- Monday
- May 11th, 2026
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நன்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. அதனைத தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கு அதாவது 12.00 மணி தொடக்கம் 1.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிப்பதற்கான நேரம் வழங்கப்படவுள்ளது. இன்று பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள்...
ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு மாதத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று(12) இடம்பெற்றது. 'சுய கண்ணால் போதையற்ற உலகை காண்போம்' எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. போதைப்பொருளிற்கு எதிராண சத்தியபிரமாணம் அரச அதிகாரிகளினால் எடுக்கப்பட்டதுடன் விசேடமாகாண இம்மாதத்தில்...
இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிசெயலாளர் நிசா பிஸ்வாலை...
"அதிகார மோகம் பிடித்து அலைந்து திரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவே நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். அந்தக் கூட்டணியில் வேட்பு மனுக்களை நாம் கையளிப்போம். இனி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசில் 5 விடயங்களை அடிப்படையாகக்கொண்டே வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்."...
நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். விரைவாக விசாரணை செய்து பிணை வழங்க வேண்டும் என கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றைப்...
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் எச்சரித்துள்ளார். யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (11) காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வேட்பு மனுத்தாக்கல் செய்யும்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவர், விசுவமடு குளத்தில் மூழ்கி நேற்று சனிக்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா சென்று விசுவமடு குளத்தில் குளித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். யாழ்.பல்கலைக வணிகபீட இரண்டாம் வருட மாணவர்களான குமுதன், கஜீபன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். உயிரிழந்த மாணவர்களின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்...
மிகப்பெரிய யுத்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார். யுத்தத்தின் மிகுதி பகுதியை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகொள்ளும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரளை கொம்பல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை(11) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை கூறியுள்ளார். 'ராஷபக்ஷ அரசை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பெரும் யுத்த...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் விலைக்குறைப்பு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அரிசியின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். வெள்ளை அரிசி மற்றும் நாட்டு அரிசி 69 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும்...
யாழ்.மாநகரசபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாவாந்துறை,கல்வியங்காடு,பாசையூர்,அரியாலை , சின்னகடை ,பண்ணை ஆகிய கடைகளின் 30 உரிமையாளர்கள் குறித்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த கடையடைப்பு தொடர்பில் தெரிய வருவது, இன்று காலை 6.30 மணியளவில் பண்ணையில் அமைந்துள்ள கொள்களத்தில் வைத்து வெட்டதயாராக இருந்த 4 மாடுகளை...
தமிழ் மக்களை ஏமாற்றி வரும் தமிழ் தலைமைகளை மாற்றவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தெற்கில் எவ்வாறு...
இராணுவம் மற்றும் அநாவசியமற்ற தேவைகளுக்காக சுவீகரித்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்தும் எமது செயற்பாடு இருக்கும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (10) யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளடங்கிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் வண. பிதா ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வேட்பாளர்கள் இன்றைய தினம் (11)...
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பைரவி (வயது 26) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்...
வவுனியா குருசுட்டகுளத்துக்கும் நெய்னாமடுவுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (10) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கனகராயங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முஹம்மது நிஜாஸ் மற்றும் புத்தளம் ஆலங்குடாவைச் சேர்ந்த ஏ.எச்.எம். ரியாஸ் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து கன்டர் ரக வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு புத்தளம் நோக்கி சென்ற போது, வாகனம்...
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலையும் அதற்கான நேர்முகத் தேர்வையும் பதவிக்கான நியமனத் தெரிவையும் உடனடியாக நிறுததி வைகக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் தற்போதைய அதிபராகப் பணியாற்றி வருகின்ற நாகராஜா மகேந்திரராஜா இந்த மனுவை தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை தொடர்பான...
சம்பூர் காணிப்பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று (நேற்று) வழங்கிய தீர்ப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கான முதல் மணியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு இன்றைய தினம் (நேற்று) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின் சம்பந்தன் ஊடகங்களுக்கு அளித்த...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னித் தேர்தல் தொகுதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என இளைஞர் கழகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வரும் நிலையில் கூட்டமைப்பு இளைஞர்கள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற...
பாடசாலைகளுக்கு அண்மையில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் பெற்றோர், ஆசிரியர் கவனமாக இருக்கவேண்டும். சந்தேகத்துக்குரிய இனிப்பு வகை விற்பனை செய்வது தொடர்பில் அறியப்படுமாயின் 1977 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யலாம் என நுகர்வோர் அதிகாரச்சபையின் பணிப்பாளர் சந்திரிக்கா திலக்கரத்ன தெரிவித்துள்ளார். டோரா (Dora) என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இனிப்பு வகைகளை உட்கொண்ட மஹாரகம பிரதேச...
யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28 ஆண்டு கால மனித நேய சேவை நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பூநகரி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முழங்காவில் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது மருத்துவ உபகரணங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
