Ad Widget

வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நன்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

அதனைத தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கு அதாவது 12.00 மணி தொடக்கம் 1.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிப்பதற்கான நேரம் வழங்கப்படவுள்ளது.

இன்று பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனுக்களை கையளிக்கவுள்ளன.

வார இறுதி நாட்களில வேட்புமனுக்களை கையளிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

கடந்த வௌ்ளிக்கிழமை வரை அங்கீகரிக்கப்பட்ட 47 கட்சிகளும் 11 சுயயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts