Ad Widget

விபத்தில் இருவர் பலி

வவுனியா குருசுட்டகுளத்துக்கும் நெய்னாமடுவுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (10) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கனகராயங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முஹம்மது நிஜாஸ் மற்றும் புத்தளம் ஆலங்குடாவைச் சேர்ந்த ஏ.எச்.எம். ரியாஸ் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து கன்டர் ரக வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு புத்தளம் நோக்கி சென்ற போது, வாகனம் மரமொன்றில் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்துச் சம்பவத்தினால் வாகனத்தில் பயணித்த இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், வாகனம் கடுமையாக சேதமாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts