தமிழில் பிசியான எமி ஜாக்சன்

மதராச பட்டினம்’ மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் எமிஜாக்சன். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் எமிஜாக்சனுக்கு முக்கிய இடம் கிடைத்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் இந்தியில் வெளியான படம் ‘சிங் இஸ் பிளிங்’. பிரபுதேவா இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை....

மரநடுகை மாதத்தை முன்னிட்டு அன்பே சிவம் அமைப்பால் மரக்கன்றுகள் விநியோகம்

வடமாகாணசபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் மரநடுகை மாதத்தை முன்னிட்டு சுவிற்சர்லாந்து சூரிச் சிவன் கோவிலின் அன்பே சிவம் அமைப்பு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறது. அன்பே சிவம் அமைப்பால் ஞாயிற்றுக்கிழமை (15.11.2015) பச்சிலைப்பள்ளி மல்வில் கிராம மக்களுக்கு நல்லின மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மல்வில் கிருஷ;ணன் கோவிலில் இடம்பெற்ற மரக்கன்றுகள் விநியோக நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு...
Ad Widget

கைதி ஒருவர் உயிரிழந்தாலும் அரசாங்கம் பொறுப்புக்கூற போவதில்லை

கைதிகளில் ஒருவர் உயிரிழந்தாலும் அரசாங்கம் பொறுப்புக்கூற போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் தம்மிடம் தெரிவித்ததாக உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை பார்வையிட்டபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவிதுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலையாகும் பட்சத்தில் அவர்களால் அச்சுறுத்தல் காணப்படலாம் என்ற அச்சத்திலேயே அரசாங்கம் தமிழ்...

யாழ் மாவட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உதவி!

கடுமையான வௌ்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்திற்கு 4.2 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இன்று (16.11.2015) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்தார். தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக நாட்டின் யாழ்ப்பாணம், மன்னார், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அந்தவகையில், யாழ் மாவட்டத்திற்கு 4.2 மில்லியன்...

கமலுடன் பணிபுரிந்த அனுபவம் : சுகா

தூங்காவனம் படத்துக்கு வசனம் எழுதிய எழுத்தாளரும் இயக்குநருமான சுகா, கமலுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘போன வருடம் தீபாவளியன்று கேரளத்தின் தொடுபுழாவில் இருந்தேன். ‘பாபநாசம்’ படப்பிடிப்பின் பரபரப்பில் தீபாவளி மறந்து போனது. இந்த வருடம் தீபாவளிக்கு நான் வசனம் எழுதியிருக்கும் ‘தூங்காவனம்’ திரைப்படம் வெளியாகிறது. பதின்வயது தீபாவளி...

இசை மூலம் இறைவனை காணமுடியும் – இளையராஜா

ஈரோடு தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை சார்பில் தமிழ் அறிஞர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு “எஸ்.கே.எம். இலக்கிய விருது” வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை தலைவர்...

எட்டு அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீர பிணைகளின் கீழ் இவர்கள் கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிராம உத்தியோகத்தரின் பதிவு சான்றிதழ் நீதிமன்றத்தில்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அழைக்கின்றார் அங்கஜன்

வடக்கில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற காரணத்தினால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் புகுந்து ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், பொது இடங்களிலும், நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர். குறிப்பாக பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள், வயதானோர் என அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் சமைத்த உணவுகளையும் உடனடியாக வழங்கி வரும்...

உலகுக்கு நல்லாட்சி வேடம் தமிழருக்கு கொடுங்கோலாட்சியா?

தமிழ் அரசியல் கைதிகளை விடுக்கக் கோரி இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவகத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் முன்னணி மற்றும் மன்னார் மக்கள் பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், எட்டு அம்ச கோரிக்கைகளை வலியூறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் அணைவரும் உடனடியாக...

பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை எமது ஆட்களே அழித்து விட்டார்கள்

பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, படையினரின் உதவியுடன் எமது ஆட்களே அழித்து விட்டதாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் வேலை முகாமையாளர் ரியாஸ் சாலி விசனம் வெளியிட்டுள்ளார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்கள் உள்ளிட்ட 1000 மில்லியன் ரூபா சொத்துக்களை அழிப்பதற்கு அனுமதித்ததற்கு இலங்கை இராணுவமே பொறுப்பேற்க வேண்டும். பிரபாகரன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, பாதுகாத்த...

துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு

சுவிஸ் தேசத்தில் வாழ்ந்து ஈழதேச உறவுகளுக்காக தங்களுடைய உழைப்பின் கணிசமான பகுதிகளை வழங்குகின்ற திரு.இராசநாயகம் ஐயா அவர்களுடைய நிதி உதவியுடன் தந்தையை இழந்த யாழ்பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்று தமிழ்த்தேசியமக்கள் முனனணியால் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பெண்கள் விவகாரங்களுக்கான தலைவி பத்மினி...

தென்மாரட்சியில் வீட்டுக்குள் புகுந்த முதலை

வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்தது குடும்பத்தவர்களை அலற வைத்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்மாரட்சி, இராமவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தென்மாரட்சி, இராமவில் பிரதேசத்தில் வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்து குடும்பத்தவர்களை அலறவைத்துள்ளது. குடும்பத்தவர்கள் அதனை விரட்டிய நிலையில், அருகிலிருந்த கேணிக்குள் பாய்ந்துள்ளது முதலை.

வலுக் குறைந்தது தாழமுக்கம்: மழை படிப்படியாகக் குறையும்

2015.11.16 ஆம் திகதி காலை காலை 05.30 மணிக்கு வழங்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு: நேற்றைய தினம் வங்காளவிரிகுடாப் பகுதியில் திருகோணமலைக்கு அருகில் காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அதன் வலு குறைவடைந்து இலங்கையை விட்டு அப்பால் நகர்கின்றது. இது நாளை பிற்பகல் இந்திய தமிழ் நாட்டு கரையோரத்திற்கு நகரும் என உதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தினால் நாட்டின் வட...

30க்கு மேற்பட்ட அரசியல் கைதிகளின் சிறுநீரகம் பாதிப்பு

அரசியல் கைதிகள் ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்வதனால் கைதிகளில் முப்பது பேருக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு எரோபட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதியுற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவகல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிறுநீரக பாதிப்புக்கு உள்ளான கைதிகளை வலுக்கட்டாயமாக வைத்திய சாலைகளில் சேர்ப்பதற்கு சிறை அதிகாரிகள் முயன்றதனாலும் கைதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையாலும்,...

க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் 27 ஆம் திகதி வெளியீடு

கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk மற்றும்...

பயங்கரவாதத் தடை சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம்

பயங்கரவாதச் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டத்தை மாதிரியாகக் கொண்ட புதிய சட்டமொன்றைக் கொண்டுவர, அரசாங்கம் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்சட்டம், அப்போது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்த பின்னால், இந்தச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானமும் இந்தச் சட்டத்தை...

கைதிகள் விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் உதவி கோரப்படும்

இலங்கை சிறைச்சாலைகளில் கடந்த 9 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற தமிழ் கைதிகளின் விடுதலை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் எதிர்வரும் 17ம் திகதி கூடி பேச்சு நடத்தி முடிவெடுக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான...

கிழக்கில் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கட்டாய உத்தரவு – வடக்கில் பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களையும் 24 மணி நேரமும் மக்கள் பணிக்காக தயார் நிலையில் இருக்குமாறு, அம் மாகாண முதலமைச்சர் சகல உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். பெய்து கொண்டிருக்கும் அடைமழையால் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஏதேனும் வகையில் நீரை வடிந்தோட வழி செய்யவேண்டும் அல்லது...

உண்ணாவிரதம் இருந்த 20 கைதிகள் வைத்தியசாலையில்..!

அண்மையில் தம்மை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அரசியல் கைதிகளில் சுமார் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களின் விடுதலை குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் உண்ணாவிரதம்...

தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம்! – ஜனாதிபதிக்கு வடக்கு முதல்வர் அவசர கடிதம்

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதுடன், உயிராபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் எம்மிடத்தில் உள்ளது. இது தொடர்பாக திங்கள் வரை காத்திருக்காது, விரைந்து செயற்படுமாறு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- நீண்ட ஆண்டுகளாக எவ்வித...
Loading posts...

All posts loaded

No more posts