Ad Widget

யாழ் மாவட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உதவி!

கடுமையான வௌ்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்திற்கு 4.2 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இன்று (16.11.2015) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக நாட்டின் யாழ்ப்பாணம், மன்னார், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அந்தவகையில், யாழ் மாவட்டத்திற்கு 4.2 மில்லியன் ரூபாவும் மன்னார் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவும் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலதிக நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரித்தார்.

அடை மழைக்கு பின்னர் வௌ்ளத்தால பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான மேலதிக உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

Related Posts