அனைத்து பாகங்களிலும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி தொடரும்!

வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் (15) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150...

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு மாகாணம்!

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,...
Ad Widget

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி உதவி வழங்குமாறு முதலமைச்சர் பணிப்பு

வடமாகாணத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குமாறு வடமாகாண அமைச்சர்களுக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார். 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட...

இரணைமடு குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் நேற்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது நீரில் மூழ்கியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, அழகரத்னம் வீதியில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்....

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டம் வெளியிட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும்...

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு நிகழ்வு

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியன் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றினார். கட்சியன் உறுப்பினர்கள் பொதுஆதரவாளர்கள் மலர் வணக்கம் செலுத்தினர். நேற்று பிற்பகல் 4.00 மணியளவில்...

அடாத மழையிலும் விடாத மரநடுகை வவுனியாவில் 15 ஏக்கரில் தேக்குமரக்காடு

அடாது தொடர்ந்து பெய்;து கொண்டிருக்கும் மழையின் மத்தியிலும் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மரநடுகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. வவுனியா ஒமந்தையில் நேற்று சனிக்கிழமை(14.11.2015) 15ஏக்கர் பரப்பளவில் தேக்கமரக்காடு ஒன்றை உருவாக்கும் நோக்குடன் தேக்க மரக்கன்றுகளின் நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாய பூர்வமாக தேக்கமரக்கன்றுகளை நட்டு நடுகையை...

கவலையில்லாத மனிதராக வாழ ஆசையா?: பேஸ்புக்கில் இருந்து விடுபடுங்கள்

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மக்களின் மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களின் பங்கு என்ன? என்பது தொடர்பாக பேஸ்புக் விரும்பிகள் ஆயிரத்து தொன்னுற்றைந்து பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. ஒவ்வொரு நாளும் தமது பேஸ்புக் பக்கத்தை தவறாது கவனித்து வரும், இந்த பயன்பாட்டாளர்களை இரு குழுவாக ஆராய்ச்சியாளர்கள் பிரித்தனர். இதில், ஒரு குழுவினருக்கு வழக்கம்போல தமது பேஸ்புக்...

பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் போராளிகளாகவிருந்து உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் கொண்டாடுப்படும் நிலையில் தற்போது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மாவீரர் தின நிகழ்வுகளின் போது, யாழ். பல்கலைக்கழகத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் மழை : கிளிநொச்சி பகுதியில் சிறிய அளவிலான புயல்!!

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டிருந்த இடையூறானது, தாழமுக்கமாக மாறியுள்ளது. இலங்கையில் இருந்து தென்கிழக்கு திசையில் இது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் மேகம் சூழ்ந்த மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நிகழும் மழையுடனான கூடிய மழை காரணமாக, நாட்டில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ராஜாங்கனை மற்றும் இரணைமடு...

வீட்டினுள் புகுந்து சிறுமியின் தலையைக் கவ்விய முதலை!

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையால் வெள்ள நீர் மற்றும் குளத்துக்கு மேலால் மேவிப் பாயும் நீர் என்பன மக்கள் குடியிருப்பினூடு பாய்ந்து வருகிறது. வெள்ள நீருடன் சேர்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்குமுதலை ஒன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்தே இச் சிறுமியை தாக்கியுள்ளது. கனகலிங்கம் விதுசா என்கிற இச்சிறுமி கிளிநொச்சி...

பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார். அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிரான்ஸில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 0033789238926 என்ற இலக்கத்தினூடாக...

சிகிச்சையைப் புறக்கணிக்கின்றனர் தமிழ் அரசியல் கைதிகள்

தமது விடுதலையை வலியுறுத்திய தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7ஆவது நாளாகவும் தொடர்கின்றது. உண்ணாவிரதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட 20 இற்கும் மேற்பட்டோர் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டபோதும், அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையைப் புறக்கணித்துள்ளனர். இவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசின் சார்பில் எந்தவித உறுதியான நடவடிக்கையும் நேற்று மாலை வரை மேற்கொள்ளப்படவில்லை எனக்...

வடமராட்சியில் பரவும் வயிற்றோட்டம்

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக, வடமராட்சிப் பிரதேசத்தில் தற்போது வயிற்றோட்டம் பரவி வருவதாக, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கி மூலம் கிராமம் கிராமமாக அறிவித்தல்கள் விடப்பட்டு வருகின்றன. குடிநீர், உணவருந்துதல் மற்றும் மலசலகூடங்களை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பில் இந்த விழிப்புணர்வு...

அரசியல் கைதிகளுக்கு என்ன பதில் சொல்வேன் – முதலமைச்சர் சி.வி

பல அரசியல் காரணங்களுக்காக, அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகையில், அரசியல் கைதிகளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பினார். சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன் வால்கர் நிடெர்கூர்ன் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (13) விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரை அவரது...

சட்டப்படி வந்தால் கட்டடங்களைத் தருகின்றேன் – டக்ளஸ்

தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களை நான் வைத்திருப்பதாக கூறுகின்றனர். அந்தக் கட்டடங்களை நீதிமன்றத்தின் ஊடாக கோரினால், அதனை நான் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஸ்ரீதர் திரையரங்கு எனது கட்சி அலுவலமாகவிருக்கின்றது. 1997ஆம் ஆண்டு நான் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த போது, வீரசிங்கம் மண்டபத்தை எனது கட்சி...

மகனை கேட்டால் ஏளனமாக சிரிக்கின்றார்கள்! – ஒரு தாயின் கண்ணீர் கதை

எனது மகன் காணாமல் போய்விட்டார் என்று எழுதப்பட்ட கடிதத்தை தருவதற்கு, கிராம அலுவலகர் பின்நிற்கின்றார். என்னை அவமானப்படுத்துகின்றார். என்னை எப்போதும் ஏளனமாகவே அவர் கதைக்கின்றார் என்று காணாமல் போனவரின் தாயார் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன், வியாழக்கிழமை (12) அமைதியான முறையில்...

கடனடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை பெற 2500 ஊடகவியலாளர்கள் தெரிவு!

ஊடகவியலாளர்களுக்காக கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 2500 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பான அனைத்து வேலைகளும் நிதியமைச்சினால் முன்னெடுக்ப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். வாராந்த...

அனைத்து பாகங்களிலும் கடும் மழை பெய்யலாம்?

வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றத்தினால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்று (14) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக...

அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கியமை குறித்து நீதி அமைச்சு விளக்கம்

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்களுடன் தொடர்பில்லாதவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்களை முற்றாக விடுதலை செய்யவில்லை எனவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 60 சந்தேகநபர்களை இவ்வாறு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களை விடுவித்தமையானது பாரிய தவறு என சிலர் அர்த்தம் கற்பிக்க முற்படுவதாகவும்...
Loading posts...

All posts loaded

No more posts