Ad Widget

பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 0033789238926 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.

[otw_shortcode_quote border_style=”dotted” background_color_class=”otw-pink-background”]இந்த நிலையில் பிரான்ஸில் இருக்கும் இலங்கையர்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 0033789238926 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.[/otw_shortcode_quote]

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Posts