Ad Widget

அனைத்து பாகங்களிலும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி தொடரும்!

வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் (15) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகங்களில் இன்னும் அதிகமான மழைவீழ்ச்சி பதியப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மன்னார் அம்பாந்தோட்டை கொழும்பு காலி முதலான கடலோரங்களிலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் காற்றின் வேகம் 70 – 80 கிலோ மீற்றரளவில் வீசக்கூடுமென்பதால் பொதுமக்கள் மீனவர்கள், கடற்துறை சார்ந்தவர்கள் என அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

[otw_shortcode_quote border_style=”bordered” background_color_class=”otw-silver-background”]மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகங்களில் இன்னும் அதிகமான மழைவீழ்ச்சி பதியப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.[/otw_shortcode_quote]

பிரதான நகரங்களின் காலநிலை

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய பிரதேசங்களில் இடியுடன் மழை பெய்யலாம்.

மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை பிற்பகல் வேளையில் மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு காலையிலும் மாலையிலும் மழைக்கான காலநிலை காணப்படலாம். கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 29.9 செல்சியஸ் பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 14.3 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்

நாட்டில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக அநுராதபுர பிரதேசத்தில் 156.0 மில்லி மீற்றர் பதியப்பட்டுள்ளது.

Related Posts