Ad Widget

கோவிட் -19 நோய்க்கான ஆயுர்வேத பானத்தை வாங்க மக்கள் அலை மோதல்

கோவிட் – 19 நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று கூறி ஆயுர்வேத வைத்தியர் தம்மிகா பண்டாரவினால் வழங்கப்படும் ஆயுர்வேத பானத்தை (டொனிக்) வாங்குவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். கேகாலையில் உள்ள ஆயுர்வேத வைத்தியரின் வீட்டிற்கு அருகே ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆயுர்வேத வைத்திய பானத்தை அண்மையில் சுகாதார அமைச்சர்,...

கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது – இரா. சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அவரது குறித்த கருத்து தொடர்பாக தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பதிலளிக்கும்...
Ad Widget

2021ஆம் ஆண்டில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் – சுதத் சமரவீர

2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். எவ்வாறாயினும், தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி தற்போது கணிசமாக...

தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கு மக்களை பயன்படுத்த வேண்டாம் – செல்வராசா கஜேந்திரன்

தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்க கூடாது என தமிழ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. சபையில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த கோரிக்கையினை விடுத்தார். வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பாக முடிவுகளை...

இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையத்தை மன்னாரில் திறந்து வைத்தார் பிரதமர்!

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம், நாட்டின் மின்...

வடமாகாண வைத்தியசாலைகளுக்கு 101 மருத்துவர்கள் புதிதாக நியமனம்

வடக்கு மாகாண சபைக்கு உள்பட்ட வைத்தியசாலைகளுக்கு 101 மருத்துவர்கள் சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 27 மருத்துவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் 20 மருத்துவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா...

யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படம் வெளியீடு!

ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படத்தின் இறுவட்டு வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள யோகர் சுவாமி சாமாதி ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா ஆவணப்படத்தை வெளியிட்டு வைக்க, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஹவாய் ஆதீனத்தைச்...

தவிசாளரை கைதுசெய்ய பொலிஸார் தீவிரம்- பிணை விண்ணப்ப பரிசீலனை ஒத்திவைப்பு!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன்படி, பிணை விண்ணப்பத்தை நாளை புதன்கிழமை நீதிமன்றம் பரிசீலனைக்கு ஒத்திவைத்ததுடன் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்செழு அம்மன் கோயில் வீதியைச் சீரமைக்கும்...

வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும்!!

வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

இலங்கையில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!!

நாட்டில் தற்போது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு மரணமும்...

கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு மீனவர்கள் – படகுப் பயணங்கள் நிறுத்தம்

புரெவி புயலின் தாக்கத்தை அடுத்து நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. 112 மீனவ குடும்பங்களின் படகுகள், இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்து அசாதாரண சூழ்நிலையால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடரும் மழை, காரணமாக கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும்...

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை கௌரவ பிரதமர் மதிப்பீடு செய்தார்

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்காக சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள்சுழற்சி கொள்கலனை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு (2020.12.03) இடம்பெற்றது. சுற்றூடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து மீள்சுழற்சி கொள்கலன் கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது....

ஆந்திரப் பிரதேசத்தில் பரவும் மர்ம நோய்; 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திரப் பிரதேசத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத ஒரு விதமான நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை முதல், குழந்தைகள், பெண்கள் உள்பட, 345 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஞாயிறு மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சுமார்...

சீரற்ற காலநிலை: யாழில் 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிப்பு

யாழில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23,304 குடும்பங்களைச் சேர்ந்த 75,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்.மாவட்டத்தில் பாரிய...

வலி கிழக்கு தவிசாளரை கைது செய்ய முயற்சி?

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைது செய்வதற்கான முயற்சியில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தவிசாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. கோப்பாய் பொலிஸார் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் தவிசாளர் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் முயற்சி...

பருத்தித்துறையில் கொரோனா சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் நேற்றையதினம் அதிகாலை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த நபரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில் கொழும்பில் இருந்து திரும்பியுள்ளார் என்றும், அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து...

மினுவாங்கொட கோரோனா வைரஸ் கொத்தணி உக்ரேனிய விமானப் பணியாளர் ஒருவரால் ஏற்பட்டது!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாளர் இடையே ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்று உக்ரேனிலிருந்து வருகை தந்த விமானப் பணியாளர் ஒருவரால் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. கோவிட் -19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே இன்று நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, நாடாளுமன்றில்...

சாதாரணதரப் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 வரை நடைபெறும் என கூறினார். க.பொ.த. சாதாரண பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி 18...

பொதுமக்களின் சமூகப் பொறுப்பற்ற தனமே யாழ் வெள்ளத்திற்கு காரணம்!! : அரச அதிபர்

யாழ் மாவட்ட மக்கள் சமூக அக்கறையோடு செயற்படும்போது வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்ந்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு மாகாணம்!

புரெவி புயலையடுத்து வடக்கில் பெய்து வரும் கன மழை காரணமாக வடக்கின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சியில் நேற்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்...
Loading posts...

All posts loaded

No more posts