Ad Widget

கண்டியில் திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

கண்டி- உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்தன. இந்நிலையில் குறித்த குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் ஏதோ ஒரு வகையான விஷம் உடலில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குரங்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால்,...

வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் குறிப்பாக காலை வேளையில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் அத்திணைக்களம்...
Ad Widget

சீரற்ற காலநிலை: யாழில் 15,459 குடும்பங்களை சேர்ந்த 51,602 பேர் பாதிப்பு!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 15459 குடும்பங்களை சேர்ந்த 51602பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும், சீரற்ற காலநிலையில் சிக்கி, இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 36 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு, 976 குடும்பங்களை...

மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் கொரோனா: கிளிநொச்சியில் சம்பவம்!!

கிளிநொச்சி- திருவையாறில் கடந்த இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற தாயின் மரண வீட்டிற்கு, கொழும்பிலிருந்து வருகைதந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது கணவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர்.பரிசோதனை முடிவு நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியது. அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரின் மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தபட்ட...

திருடப் போன வீட்டாருக்கு நெஞ்சுவலி!! சுடுதண்ணீர் வார்த்துக் கொடுத்து பின் திருடிய திருடன்!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறு வீடுகளில் நேற்று முன்தினம் இரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி கல்வயல் பகுதியில் உள்ள பெருங்குளம் வேதனப் பிள்ளையார் கோவில் மற்றும் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவில் ஆகிய பகுதிகளிலேயே இக் குழு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவில் பகுதியில் உள்ள வீட்டொன்றில்...

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக, நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 26 அடி 1அங்குலமாக உயர்ந்துள்ளது. 36...

பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா!

பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்றையதினம் (03) வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. தனது மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த நிலையில் திரும்பிய 34 வயதுடைய குடும்பத்தலைவருக்கே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் குடும்பத்துடன் கடந்த 14 நாள்கள்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2021 மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் – கல்வி அமைச்சர்

2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் இறுதிக்குள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். நேற்றையதினம் அரசு தகவல் திணைக்களத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; கோரோனா வைரஸ் பரவுவதால் நாட்டில் கிட்டத்தட்ட அரைவாசி பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதைக்...

நாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 26,038 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 627 கொரோனா தொற்றாளர்களும் மினுவாங்கொடை - பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள்...

பிரபாகரனைக் கொல்வதற்காக இலட்சக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றமையே யுத்தக் குற்றம்- கஜேந்திரகுமார்

பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியமையும், ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதறாக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையுமே நாம் கூறும் போர் குற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

புரேவி புயல் இன்று பிற்பகல் மன்னார் வளைகுடாவைக் கடக்கும்

“புரேவி” புயலின் மையம் இலங்கையின் வடகிழக்கு கடற்கரையை குச்சவேலி மற்றும் திரியாய் இடையே நேற்று இரவு கடந்தது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 70-80 கிலோ மீற்றர் வேகத்திலும் 90 கிலோ மீற்றர் வேகத்திலும் காற்று வீசியது. புயல் இப்போது மேற்கு-வட-மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது, இன்று பிற்பகலுக்குள் மன்னார் வளைகுடாவில் வெளியேறுகிறது. எனவே...

ஊரெழு பொக்கணை கிணறு ஊடாக சூடான கடல் நீர் பாய்கிறது – மக்கள் இடம்பெயர்வு

ஊரெழு பொக்கணைக் கிணறு நீர்மட்டம் உயர்ந்து கடல்நீர் உள்புகுந்துள்ளதாத அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொக்கணை கிணறில் வழிந்தோடும் நீர் கடுமையான சூடாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டனர். அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள குழாய்க்கிணறுகள் மற்றும் கிணறுகளும் நிலமட்டத்துக்கு மேலாக நீர் எழுந்து பாய்கின்றன. அதனால் இன்று வியாழக்கிழமை காலை முதல் பொக்கணை கிணறை...

பட்டப்பகலில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து கத்திமுனையில் கொள்ளை – புதைத்து வைத்த நகைகளையும் மிரட்டி எடுத்தது கும்பல்

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இரண்டு வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் இருவர் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடித்துத் தப்பித்துள்ளனர். சின்னப்பா வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு வசிக்கும் வயோதிபர்களை கத்திகளைக் காண்பித்து மிரட்டி தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில்...

வடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

வடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, மார்ச் முதல் செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் 17 நோயாளர்களும் ஒக்டோபரில் 39 பேரும் நவம்பரில் 27 பேரும் டிசெம்பரில் இன்றுவரை ஒருவர் என தொற்றாளர்கள்...

யாழில் மினி சூறாவளி- 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோயிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவு இடம்பெயர்ந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் அனர்த்தம் காரணமாக வீடொன்றின் கூரை வீழ்ந்து ஏற்பட்ட பாதிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு- மக்களுக்கு எச்சரிக்கை!

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்றையதினம் (புதன்கிழமை) இரவு பத்து மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் இன்று வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அக்கராயன்குளம் 11 அடி 04 இஞ்ச் “FSL 25′-0”, கரியாலை நாகமடுவான் குளம் 02...

யாழில் தொடர் மழையால் 1,500இற்கு மேற்பட்டோர் பாதிப்பு- மூவரைக் காணவில்லை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல் போயுள்ளதாகவும்,...

மரங்கள் சாயும், மின் தடை ஏற்படலாம், குடிதண்ணீரை சேகரித்து வைக்கவேண்டும் – யாழ்ப்பாணம் மக்களுக்கு முன் எச்சரிக்கை

காலநிலை சீரின்மையால் யாழ்ப்பாணம் மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்ப்படுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள மாவட்ட செயலர் க. மகேசன் , கோவிட் -19 நோய் தொடர்பிலும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்திந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;...

யாழ்.மாநகர சபையின் 2021 பட்ஜெட் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் கடந்த ஆண்டு இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் தனக்கு உள்ள அதிகாரத்தால் அதனை நிறைவேற்றியிருந்தார். எனினும் இந்த ஆண்டு 2021ஆம் ஆண்டுக்கான வரவு...

வெடிபொருட்களுடன் கிளிநொச்சியில் பெண்ணெருவர் கைது!!

கிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருட்களுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீடு தற்போது பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது தொடர்பான முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன், குறித்த பகுதியை காட்சிப்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுளளது.
Loading posts...

All posts loaded

No more posts