Ad Widget

ஊரெழு பொக்கணை கிணறு ஊடாக சூடான கடல் நீர் பாய்கிறது – மக்கள் இடம்பெயர்வு

ஊரெழு பொக்கணைக் கிணறு நீர்மட்டம் உயர்ந்து கடல்நீர் உள்புகுந்துள்ளதாத அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொக்கணை கிணறில் வழிந்தோடும் நீர் கடுமையான சூடாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டனர்.

அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள குழாய்க்கிணறுகள் மற்றும் கிணறுகளும் நிலமட்டத்துக்கு மேலாக நீர் எழுந்து பாய்கின்றன.

அதனால் இன்று வியாழக்கிழமை காலை முதல் பொக்கணை கிணறை அண்டியுள்ள பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நிஷா புயல் வந்த போது ஏற்பட்ட நிலமை தற்போது புரேவி புயலுக்கும் ஏற்பட்டுள்ளது என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த பொக்கணை கிணறுக்கும் கீரிமலைக்கும் தொடர்பிருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது.கீரிமலைக் கடல் கொந்தளிக்கும் போது இவ் பொக்கணை கிணறு வழியாக தண்ணீரை வெளியில் தள்ளுவது வழமை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Posts