Ad Widget

தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கு மக்களை பயன்படுத்த வேண்டாம் – செல்வராசா கஜேந்திரன்

தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்க கூடாது என தமிழ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சபையில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த கோரிக்கையினை விடுத்தார்.

வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பாக முடிவுகளை எடுக்கும்போது அப்பகுதியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துகளையும் செவிமடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கொழும்பில் இருந்துகொண்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து முடிவெடுக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts