Ad Widget

மினுவாங்கொட கோரோனா வைரஸ் கொத்தணி உக்ரேனிய விமானப் பணியாளர் ஒருவரால் ஏற்பட்டது!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாளர் இடையே ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்று உக்ரேனிலிருந்து வருகை தந்த விமானப் பணியாளர் ஒருவரால் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.

கோவிட் -19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே இன்று நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே இந்தப் பதிலை வழங்கினார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு வைரஸ் பரவுவது குறித்த ஆய்வு பல பரிமாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்படி விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts