Ad Widget

மனோரமா அபாய கட்டத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி

பழம்பெரும் நடிகை மனோரமா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அது வெறும் வதந்தி என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த...

மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்தது அயர்லாந்து!

உலக கிண்ண போட்டியின் 5வது லீக் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கெய்ல்...
Ad Widget

விக்னேஸ்வரனின் இரட்டை வேடம்! சி.தவராசா

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை குறித்த தீர்மானம் பற்றி, வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கருத்து வௌியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இலங்கை அரசின் இனப் படுகொலை தொடர்பாக அண்மையில் வட மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஜனாதிபதி சிறிசேனவிற்கோ அல்லது அவரின் அரசிற்கோ எதிரானதல்ல எனவும் முன்னைய அரசுகளையே, குறிப்பாக...

இடமாற்றம் வழங்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வன்னி, மற்றும் தீவக வலய பாடசாலைகளில் பணியாற்றி தமது பணிக்காலம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண கல்வி அமைச்சு செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகைக்கடை உரிமையாளரை அச்சுறுத்தி பணத்தைப் பெற பொலிஸார் முயற்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடை உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்தி பெருந் தொகைப் பணத்தை பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த சம்பவமொன்று யாழ் நகரில் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ் நகரின் கஸ் தூரியார் வீதியிலுள்ள நகைக் கடையொன்றின் உரிமையாளருக்கு கடந்த சில தினங்களாக இடம் பெற்று வருவதாக அக்கடையின் உரிமையாளர்...

நீதிமன்ற உத்தரவின்றி கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்த முடியாது

கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மாத்திரமே நிறுத்த முடியும். மக்கள் வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாயில் கொட்டப்படுவதை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மக்களுடன் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...

வட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா ராஜினாமா?

வட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலனின் இராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுழற்சி முறையில் வட மாகாண சபை உறுப்பினர் பதவி வகிப்பதாகக்கூறி, மேரி கமலா வட மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில், ஒரு வருட காலத்தில்...

ஜனாதிபதி மைத்திரிக்கு டெல்லியில் மகத்தான வரவேற்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டது. இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில்...

யாழில் மாணவி கடத்தல்

யாழ்.விக்டோரியா வீதியில் வைத்து மாணவியொருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ். விக்டோரியா வீதியால் வந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியை வானில் வந்தவர்கள் நேற்று காலை கடத்திச் சென்றுள்ளனர். பூநகரியை சேர்ந்த மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். பூநகரியில் வசிக்கும் இவர், சனி, ஞாயிறு தினங்களில் அரியாலையிலுள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்து...

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – ததேகூ

இலங்கையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் வேளையில்,...

காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய மோகன்லால்!

உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் காதலர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பலவிதமான காதலர் தின கொண்டாட்டங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் மலையால நடிகர் மோகன்லால் சற்று வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்கு உள்ளவர்களுடன் நேரம் செலவழித்து கொண்டாடியுள்ளார். அதுபற்றி அவர் முகநூல்...

புற்று நோய் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து பணம் சம்பாதிப்பதோடு மட்டும் இல்லாமல், தங்கள் மனதுக்குப் பிடித்த நல்ல காரியங்களுக்கு செலவு செய்து தங்கள் ஈடுபாட்டை தெரிவித்து வருகிறார்கள். அப்படி பல நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். கஷ்டப்பட்டு வரும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை விஜய் செய்து வருகிறார். தற்போது சென்னையில்...

சர்வதேச மத்தியஸ்தம் இல்லாத உள்நாட்டு விசாரணையை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்கிறார் சுமந்திரன்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்காது பிற்போடக்கோரும் இலங்கை அரசு, அந்த அறிக்கையை வெளிவராமல் தடுத்து, உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற...

தனக்கு அச்சுறுத்தல் என்று பிரதி அமைச்சர் விஜயகலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலர் "உயிருடன் இருக்க விருப்பம் இல்லையா" என்று மிரட்டினர் என்று தெரிவித்து மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளார். நேற்றிரவு சில அநாமதேய தொலைபேசி இலக்கங்களில் இருந்து தனக்கு அழைப்புக்கள் வந்தன என்றும், அதில் பேசியவர்கள், தான் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி,...

கழிவுகள் கொட்டுவதை நிறுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாநகர சபையால் சேகரிக்கப்படும் கழிவுகளை காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் பகுதிகளில் கொட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை (15) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 'நீங்கள் ஏ.சி.யில் நாங்கள் மலக்கழிவுகளுக்கு மத்தியிலா', 'மாநகர சபையே குப்பை கொட்டுவதற்கு வேறு...

வடமாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் பற்றாக்குறை

வடமாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பல்வேறு திட்டங்களை நிவர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன், சனிக்கிழமை (14) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கால்நடை அபிவிருத்தி போதனாசியர்களால் மேற்கொள்ளப்படும் முக்கியமான வேலை, செயற்கைமுறை சினைப்படுத்தல் ஆகும். போதனாசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தனியார்...

ஐ.நா. விசாரணை அறிக்கை; யாழில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, யாழில் மாபெரும் பேரணி ஒன்றை எதிர்வரும் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் ஏ.இராஜகுமாரன், சனிக்கிழமை (14) தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...

13ஆவது திருத்தத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்: சம்பந்தன்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை...

முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால், யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளின் குடும்ப விபரங்கள், தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் என்பன தற்போது திரட்டப்பட்டுகின்றன. இதற்கான படிவங்களை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள கிராம அபிவிருத்தி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்....

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இந்து பௌத்த கலாசார பேரவையின் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (14) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் 580 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்து பௌத்த கலாசார பேரவையில் இதுவரை 6,000 பேர் கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளனர்....
Loading posts...

All posts loaded

No more posts