- Friday
- April 26th, 2024
‘மொழி’, ‘அபியும் நானும்’ ‘பயணம்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘உப்பு கருவாடு’. இதில் கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, குமரவேல், சாம்ஸ், ரக்ஷிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்டீவ் வாட்ஸ் இசையமைக்கிறார். இவருடைய...
ஆட்சிமாற்றத்தின் பின்னரும் வடமாகாண ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர், இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடிக்காமல் தடுக்கப்படவேண்டும் என சர்வதேச ஊடக கூட்டமைப்பு (IFJ ) தெரிவித்துள்ளது. யாழ். குடாநாட்டுக்கு வருகைதந்திருந்த குறித்த அமைப்பினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். அதன் பின்னர் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர்கள் கூறியதாவது,...
தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் சம்பந்தமாக பொது மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக விசேட பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- பொதுமக்கள் பங்கேற்புடன் மிகவும் பயன்மிக்க, வினைத்திறன் மிக்க மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வகையில் இந்த...
இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணிகளையும், வீடுகளையும் விடுவிக்கக்கோரி உரிமையாளர்கள் பொலிஸ்நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 13 வீடுகளையும், 8 விவசாயக்காணிகளையும் உள்ளடக்கி இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளையும் வீடுகளையும் விடுவிக்கக்கோரியே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளவாலைப் பங்கு தந்தை ஜெயரஞ்சன் அடிகளார் தலைமையில் பொலிஸ் நிலையத்தின் முன்பாகக்...
சாவகச்சேரி பெருங்குளம் சந்தியில் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினார்கள். கெருடாவிலைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் (வயது 28), சிவகுமார் கோபன் (வயது 23) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். முன் பகை காரணமாக இவர்கள் இருவரும் வாளால் வெட்டப்பட்டதாகவும் சந்தேகநபர்களை கைது செய்தவதற்கான...
வட பகுதிக்கு இப்போது மத்திய அமைச்சர்கள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பழுத்த மரத்துக்கு வெளவால்கள் வரும் என்பார்கள். அது போன்றுதான் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்தே மத்திய அமைச்சர்கள் தினந்தோறும் வடக்குக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே எமது மக்களின் கருத்தாக உள்ளது. அவ்வாறு இல்லாமல், உண்மையாகவே தமிழ் மக்கள்...
வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு 7 மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையில் சனிக்கிழமை (28) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் அவர் கூறுகையில், வடமாகாண மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி...
கடவூச்சீட்டுக்களோ அல்லது சட்ட ரீதியான ஆவணங்களோ எதுவுமின்றி இந்தோனேஷியாவினுள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சுமார் 85 இலங்கையர்கள் வட சுமத்திராவின் பெலவான், மேதன் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள், இன்னமும் பாதுகாப்பு முன்னரங்க வேலி பின்நகர்த்தப் படவில்லை. இதனை நகர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று ராணுவத்தினருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு, வலி.கிழக்கு உயர் பாதுகாப்பு வலயங்களினுள் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த் துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக, விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்களை மீள்குடியேற்ற அமைச்சர்...
லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் நேற்று மாலை நடந்த விபத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். ஹம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பென்ஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. மேற்கு ஹம்டனில் இருந்து றோயல்...
எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு...
பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுமார் 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான என்புமுறிவு உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சு.வித்தியானந்தனின் குடும்பத்தினரால் (அமெரிக்கா) இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, என்புமுறிவு சத்திரசிகிச்சை உபகரணம், வீடியோ மூலம் சிகிச்சை அளிக்கும் உபகரணம், மார்பு சிகிச்சை உபகரணம் போன்ற வகையிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் அனைத்துலக...
கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றதைக் கண்டித்தும் இவ்வாண்டு நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குறிப்பிட்டும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வெள்ளிக்கிழமை (27) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'கடந்த ஆண்டு இடம்பெற்ற...
சிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை நாம் பார்க்கும் விதம் குறித்த எமக்குள் இருக்கும் முரண்பாடே இதற்கு காரணம். இந்தப் படத்தில் இருக்கும் உடை வெள்ளையும், பொன்னிறமும் என்று நீங்கள் கூறினால், அது முழுப்...
புதிய கையடக்கத் தொலைபேசி வாங்குவது முதல் காதலி பிரிந்து போன சோகம் வரை இன்றைய இளசுகள், தன் சுக துக்கங்களை முதலில் தெரிவிப்பது பேஸ்புக்கில்தான். எனவே, ஒரு மனிதனின் மனநிலையை பேஸ்புக்கினால் புரிந்து கொள்ள முடியும். இந்த வகையில் பயனாளிகளின் தற்கொலை எண்ணத்தை சரியான நேரத்தில் புரிந்து கொண்டு அதை தடுப்பதற்கான ‘உயிர் காப்பான் தோழன்’...
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் குழு 'ஏ' இற்கான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 32.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது....
கச்சதீவு செல்வதற்கான பதிவு செய்யப்பட்ட படகுகள் குறைவாக இருப்பதால் 200க்கு மேற்பட்ட மக்கள் குறிகட்டுவானில் படகுகளுக்காக காத்திருக்கின்றனர். இதுவரையில் 700க்கு அதிகமான மக்கள் பதிவு செய்யப்பட்ட 5 படகுகள் மூலம் சென்று விட்டனர் எனினும் மீதமுள்ள 200க்கு அதிகமான மக்கள் குறிகட்டுவானிலேயே காத்திருக்கின்றனர். இதேவேளை படகு மூலம் கச்சதீவு செல்வதற்கு மாத்திரம் 5 மணித்தியாலங்கள் தேவை...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவெடுக்கும். அமர்தலிங்கத்தினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் இனி ஒரு போதும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சியான தூய்மையான ஹெல உறுமய யாருக்கும் திறக்காத சர்வதேச கதவுகள் எதிர்க்கட்சிக்காக திறக்கும்...
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி வரும் 5, 6, 7 ஆம் திகதிகளில் இடம்பெறும். 109 ஆவது தடவையாக நடக்கும் இந்தப் போட்டிக்கு 'எயார்ரெல் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது. மைதானத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர். இதுவரை நடந்து...
இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை (27) இளவாலை ஹென்ரியரசர் கல்லூரியிலும் வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைத்ததோடு, யாழ். மத்திய கல்லூரிக்கு கணணிகளையும் வழங்கி...
Loading posts...
All posts loaded
No more posts