எதிர்பார்த்த விளைச்சல் இல்லை யாழ். நெற்செய்கையாளர் கவலை

யாழ்.குடாநாட்டில் விவசாயிகளால் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற் செய்கை எதிர்பார்த்த விளைச்சலை ஈட்டிக் கொடுக்கவில்லை. இதனால் தாம் நட்டமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

பல்கலை. மாணவர்களை விடுதலை செய்ய கோரி யாழ். நகரில் கையெழுத்து போராட்டம் சமவுரிமை இயக்கத்தின் வாகனம் மீது தாக்குதல்;கழிவு ஒயிலும் வீச்சு

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10 மணியிலிருந்து நடைபெற்றுவருகிறது. (more…)
Ad Widget

கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் புனர்வாழ்வு முடிந்ததும் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவர்: யாழ்.கட்டளைத் தளபதி

வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என (more…)

இளைஞர், யுவதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

இளைஞர், யுவதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள திருறைக்கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ரி.ஈஸ்வரராஜா தலைமையில் 13 ஜனவரி 2013 அன்று நடைபெற்றது . (more…)

யாழ். போதனா வைத்தியசாலை; இதய சத்திரசிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டடம்

யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு என புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது என்று வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு; சாடுகிறார் முன்னாள் நீதியரசர்

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். (more…)

பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயம்

பட்டாசு வெடித்தில் சிதறியதில் சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

கீரிமலை, சேந்தாங்குளம் கடலில் குளிக்கச் சென்று காணாமல் போயிருந்த மாசியப்பிட்டியை சேர்ந்த சிவலிங்கம் உமாசங்கர் என்ற 16 வயது சிறுவனின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழில் நான்கு நாட்களுக்கு 9 மணித்தியாலயம் மின் தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் (more…)

இன்று 313 முன்னாள் புலி உறுப்பினர் சமூகத்துடன் இணைப்பு

யுத்தத்தின் போது சரணரடந்த கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 313 பேர் இன்யய தினம் விடுதலை செய்யப்பட்டனர்.வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றிலேயே இவர்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். (more…)

கிளிநொச்சி சம்பவம்! அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்!- சிறிதரன் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். (more…)

பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்க பதவி நீக்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.அதன்படி அங்கீகார ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டுள்ளார். (more…)

வட மாகாண ஆளுநரின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக திரு.எதிர்வீரசிங்கம் !

வட மாகாண சபைக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)

தேசிய மீனவர் மாநாடு

தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் தேசிய மகாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி அலரி மாளிகை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார். (more…)

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் குற்றப் பிரேரணை சபையில் வெற்றி; நாடாளுமன்றில் நேற்று கடும் வாதப்பிரதிவாதங்கள்

இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் முதல் பெண் பிரதம நீதியரசரான கலா நிதி ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்யும் குற்றவியல் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. (more…)

ரிக்கெட் வழங்காத பஸ்களுக்கு எதிரான நடவடிக்கை எப்போது? விசனம் தெரிவிக்கின்றனர் மக்கள்

தனியார் பஸ்களில் ரிக்கெட் வழங்க வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதனை பெரும்பான்மையான தனியார் பஸ்கள் பின்பற்றுவதில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழில் 8 கிலோ கிராம் வெடிமருந்து இராணுவத்தினரால் மீட்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், கப்பல் துறைமுகத்தில் இருந்து 8 கிலோ கிராம் வெடிமருந்து இராணுவத்தினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். (more…)

புதிய மின் இணைப்புகளுக்கு உயர்வடைந்தது கட்டணம்!

புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணம் இந்த ஆண்டில் இருந்து ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மின் பொறி யியலாளர் எஸ்.ஞானகணேசன் இத்தகவலைத் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர் பாக அவர் மேலும் கூறியதாவது: (more…)

பெண்களுக்கான தையல் பயிற்சி நெறி ஆரம்பிப்பு

வடமராட்சி இடம்பெயர்ந்தோர் நலன் பேணும் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் தையல் பயிற்சி நெறியொன்று வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் மாதர் சங்க மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

வடமாகாணத்தில் ஊ.சே.நிதியத்தில் 902 நிறுவனங்கள் இணைப்பு: பிரதித் தொழில் ஆணையாளர்

வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதிய திட்டத்தில் 3,164 தொழில் நிறுவனங்கள் கடந்த வருடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts