- Tuesday
- May 6th, 2025
இறுதி யுத்தததில் தனது மகளைப் பறிகொடுத்த தாயொருவர் மன அழுத்தம் தாங்கமுடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தர்மலிங்கம் புனிதவதி (வயது 60) என்ற தாயொருவரே இவ்வாறு மரணமானவராவார். (more…)
கிளிநொச்சி யாழ். நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பேர் நேரடியாக நன்மை பெறவுள்ளனர். குடிதண்ணீர் வழங்கல் மூலம் சுமார் 3 லட்சம் பயனாளிகளும் கழிவு நீர் அகற்றல் மூலம் 80 ஆயிரம் பயனாளிகளும் நீர்ப்பாசனம் மூலம் 55 ஆயிரம் பயனாளிகளுமாக மொத்தம் 4 லட்சத்து 35 ஆயிரம்...
சாவகச்சேரி சரசாலை பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதானா வைத்திசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றிக்கிழமை காலை 9.30 மணிக்கு சாவகச்சேரி சரசாலை பகுதியில் நடைபெற்றுள்ளது. (more…)
வழி அனுமதிப் பத்திரம் பெறாது வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பஸ்களுக்கு உயர் அதிகாரிகள் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இவ்வாறு கூறினார். யாழ்.மாவட்ட தனியார் பஸ் சாரதிகள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக நேற்று பிராந்திய அலுவலகத்தில் பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது....
இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை...
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநோயாளிகளாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று நாடாளுமன்றில் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க பதிலளிக்கும் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். (more…)
நீண்ட நாள் ஆரவாரத்திற்கு பின்னர் 15 ஆவது இலங்கை ஆளுனர்களின் மாநாடு நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த மாநாடு ஏன் எதற்காக நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னர். நடந்து முடிந்திருக்கின்றது. இதற்காக பல லட்சம் ரூபா பணம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. நேற்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை மூன்று நாள் குத்தகைக்கு எடுத்த...
யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளக வலைப்பின்னல் ஊடான இணைய இணைப்பில் FaceBook மற்றும் Youtube சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் Youtube மாத்திரம் தடைசெய்யப்பட்டிருந்தது. இருப்பினும் FaceBook இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (more…)
இலங்கையின் வடக்கே பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அரசதரப்பு முன்வைத்த ஆட்சேபனையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. (more…)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரன் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில், உயரம் பாய்தலில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர், அல்பேர்ட் பார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளார். (more…)
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் சேவையில் ஈடுபடும் பெருமளவான தனியார் சொகுசு பஸ்கள் நேற்று சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தனியார் பஸ் சாரதிகள் சிலர் நேற்று அதிகாலை வத்தளைப் பிரதேசத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிசோதகர்களினால் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், இதனைக் கண்டித்தே சேவை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் யாழ். கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது, (more…)
நெடுந்தீவு குமுதினிப் படகு பணியாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினருடைய மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். இச் சம்வம் நேற்று காலை குறிகாட்டுவான் இறங்கு துறையில் இடம்பெற்றுள்ளது.நெடுந்தீவு 13 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ்.பாலசிங்கம் (வயது 64) என்னும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குமுதினிப் படகுக் பணியாளரே மேற்படிச் சம்பத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர் ஆவர். (more…)
வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதன் அடிப்படையில் 27 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 43க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளா அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். (more…)
இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கணனிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கணனி பயிற்சி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளை செயற்திறனாக மேற்கொள்ள முடியும். கணனிப் பயிற்சிகளுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். (more…)
2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகியது. இதன் போது அடுத்த ஆண்டு நடைமுறைப்டுத்தப்படவுள்ள திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்தார். (more…)
இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டுபிடிப்பாளர் தேடல் -2012 எனும் கருப்பொருளைக் கொண்ட கண்காட்சியொன்று யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது. யாழ். மாவட்டத்தில் இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டு பிடிப்பாளர் தேடல் - 2012 எனும் கருப்பொருளிலான கண்காட்சி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் எலைற்றின் நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இயக்குனர்...
”வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் ஆட்சிப்பீடமேறும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நாட்டில் சட்டங்களை அமுல்படுத்த முடியாத நிலை அரசுக்கு ஏற்படும். இந்த விடயத்தில் அரசுக்கு வடமாகாண சபை சிம்ம சொப்பனமாகத் திகழும். எனவே, வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவே கூடாது.''இவ்வாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...
போதிய தாதிய வளம் இன்றியே யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பட்டு வருவதாக பணிப்பாளர் டாக்டர் எஸ்.பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.இன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை மற்றும் சர்வ மதக்குழுவிடமே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 1500 தாதியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 450 தாதியர்களே பணியாற்றுகின்றனர். (more…)
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது புத்தளத்திற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பேருந்தின் ஒரு பக்கக் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது.இச்சம்பவம் நேற்று முன்நாள் திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. (more…)

All posts loaded
No more posts