- Wednesday
- June 10th, 2026
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ரூ. 87.29 கோடி செலவில், 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை இந்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வவுனியா, அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோக்கத்தில் அதன் உள்கட்டமைப்பு...
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே தனுஷ், அனிருத், வேல்ராஜ் கூட்டணியில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் ‘தங்கமகன்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் குறித்து தனுஷ் கூறும்போது,...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கிய ‘ரஜினி முருகன்’ கடந்த தீபாவளிக்கே வெளியாவதாக இருந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் படம் வெளியாவது தள்ளிப் போனது. அடுத்தடுத்து பல தேதிகளில் இப்படம் வெளியாகும் என அறிவிப்புகள் எழுந்த வண்ணம் இருந்தபோதிலும், படம் ரிலீசாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 4-ந்...
எழுத்தாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்புணர்வு தேவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த பாடலின் வரிகளை கண்டித்து இருவர் மீது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்...
தற்சமயம் ஜி.சீ.ஈ. (சாதாரணதரப்) பரீட்சை நடந்துக் கொண்டிருக்கும் பரீட்சை நிலையங்களில் அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு 600 ற்கு மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட அதிரடிப்படையொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம், வலயக்கல்விக் காரியாலயங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த அதிரடிப்படையில் பங்கேற்கவுள்ளதாகவும், வினாப்பத்திரங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இணைப்பு மத்திய நிலையங்களில் 24 மணித்தியாலங்களும், பரீட்சை நடக்கும்...
யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சாவகச்சேரி - மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி சாரதி புகையிரத கடவையின் சமிஞ்ஞையை கவனிக்காது புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோது எதிரே வந்த புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் படுகாயமடைந்த முச்சக்கர...
காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ். மாவட்டத்திற்கான மற்றுமொரு அமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெறுகின்றது. காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் ஆணைக்குழு 9 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 1620 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. நல்லூர், யாழ்ப்பாணம், கரவெட்டி, மருதங்கேணி,...
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோர்வேயின் அரசியலமைப்பு நிபுணரான கெவன் வெலான்கேவின் ஆலோசனையின் அடிப்படையில், வரையப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் எனவும் அரசியலமைப்புச் சட்டம் குறித்து வடக்கு,...
காணாமற்போன ஒருவரைக் கண்டறிவதற்காக பலாலி மற்றும் அச்சுவேலி இராணுவ முகாம்கள் சோதனையிடப்பட வேண்டும் என ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு பரிந்துரை செய்வதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்டவர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன்...
இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இனப்படுகொலை ஒன்று இடம்பெறவில்லை என்று தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக வெளியாகிய அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர்...
அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடையவிருக்கும் அரசியல் தீர்வை மையமாகக்கொண்டே எதிர்வரும் 19 ஆம் திகதியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு த.தே.கூ. ஆதரவு நல்க இருக்கின்றது. தீர்வு...
திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் மீட்கப்பட்டிருந்தவரின் சடலம், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவராக இருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணைகளை நடத்துவதாக தமிழக கியூ பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த ஆறாம் திகதி மீட்கப்பட்ட இந்த சடலம், சென்னையைச் சேர்ந்த பூமிதுரை என்ற ஒரு வாடகை வாகன...
இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் கடமையாற்றும் ஆண்கள் மட்டுமன்றி பெண் சிப்பாய்களும் சைபர் குற்றங்களில் தொடர்புபட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. அண்மையில் கொழும்பின் தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் 23வயதான யுவதியொருவர், தனது முன்னாள் காதலனான விமானப்படை பொறியியலாளர் ஒருவர் தனது நிர்வாணப் படங்களை வைத்து மிரட்டிக் கொண்டிருப்பதாக குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஒருபோதும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெரும் குற்றச்சாட்டுக்கள் இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கோ அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கோ அரசாங்கம் இணங்கியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புலி சந்தேகநபர்களை விடுவிப்பதாக நாம் ஒருபோதும் உறுதிமொழி...
இன்று ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாள். முதல் முறையாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக அமைதியாக, மக்களுக்கு உதவி செய்தபடி இந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். [caption id="attachment_54963" align="aligncenter" width="600"] கபாலியில் ரஜினியின் தோற்றம்[/caption] பொதுவாக ரஜினி பிறந்த நாளை ரசிகர்கள் திருவிழா மாதிரி கொண்டாடுவார்கள். டிசம்பர் மாதம் முழுவதும் கொண்டாட்டங்கள்...
காணாமல் போனோர் ஆணைக்குழு தமது விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் நடத்திவருகின்ற நிலையில் இன்றைய தினம் சாட்சியளிக்கவந்த பாதிக்கப்பட்ட பலர் துயரத்தை கூறிக்கொண்டிருந்த வேளையில் மயங்கிவிழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இரண்டாவது நாள் அமர்வுகளை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை தொடர்ந்துள்ளது. இன்றைய தினம் பலர்...
திருமணமாகி 15 நாளாகிய எனது மகனை 2006-09-10 திருநெல்வேலியில் உள்ள எனது வீட்டிற்கு அதிகாலை 1.30 ற்கு வந்த குழுவினரால் கடத்தப் பட்டார். 2013ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொள்ளுப்பிட்டியில் ஈ.பீ.டீ.பி உறுப்பினர்களுடன் எனது உறவினர்கள் கன்டனர் என தந்தையார் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி...
தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வட மாகாணசபை மற்றும் ஏனைய சில அமைப்புக்களினால் திரட்டப்பட்ட பணம் மற்றும் பொருள் உதவிகளை ஏற்றுக்கொள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. தமிழக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிராலய...
யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ். பொம்மைவெளிப் பிரதேச மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அண்மையில் யாழ்ப்பாணமெங்கும் பரவலாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்தப் பிரதேச மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் தொற்றுநோய்கள் மற்றும் தோல் நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து...
நாவற்குழி கிழக்கு கோவிலாக் கண்டி பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு 7மாதம் 19ஆம் திகதி எமது பகுதியில் 5 கிலோ மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பலரை அழைத்துச் சென்றனர். பிரதேச சபையில் 4 தலையாட்டிகளை நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது ஆண்களை ஒரு வரிசையாகவும், பெண்களை ஒரு வரிசையாகவும் நிற்க வைத்து தலையாட்டியை...
Loading posts...
All posts loaded
No more posts
