யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ். பொம்மைவெளிப் பிரதேச மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
அண்மையில் யாழ்ப்பாணமெங்கும் பரவலாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்தப் பிரதேச மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் தொற்றுநோய்கள் மற்றும் தோல் நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இதற்கான அனுசரணையினை சென்னை மற்றும் சேலம் றோட்டறி மாவட்டத்தினைச் சேர்ந்த கழகங்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.