சவுதியில் பணிபுரிபவர்கள் சம்பள பணத்தை இலங்கை A.T.M ஊடாகப் பெறும் வசதி

சவுதியில் பணிபுரியும் இலங்கை தொழிலார்களின் சம்பளத்தை இலங்கை ஏ.டி.எம்கள் ஊடாக இலகுவாகவும், துரிதமாகவும் பெற்றுக் கொள்ளும் வசதியை செய்து கொடுப்பதில் ஒத்துழைப்புடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி விடுத்த வேண்டுகோளை சவுதி அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொழில்கள் அமைக்க மத்திய கிழக்கு நாடுகளில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும்...

யாழ்.குடாநாட்டில் குவிந்த தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்!

யாழ்.குடாநாட்டுக்கு நேற்றய தினம் வழமையை விட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். கடந்த சில தினங்களாகவே அதிகளவிலான சுற்றுலா பயணிகள் யாழ்.கோட்டை, ஆரியகுளம் நாக விகாரை, நல்லூர் கந்தசுவாமி ஆலயம், யாழ்.நகரப் பகுதிகளில் காணப்பட்டனர். இந்த நிலையில், கிறிஸ்மஸ் தினமான நேற்று வழமையை விட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். பண்டிகை நாட்கள்...
Ad Widget

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள டயஸுக்கு பதவி நீடிப்பு இல்லையாம்! ஹத்துருசிங்க உட்பட மேலும் பல மேஜர் ஜெனரல்கள் அடுத்த வருடம் ஓய்வு!!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டவரும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருப்பவருமான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு இராணுவ சேவையில் நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என அறியமுடிகின்றது. இதனால், மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு இன்றுடன் ஓய்வு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆவணங்களும்...

அந்தியேட்டி வீட்டுக்கு சமைக்கச் சென்றவர் திடீர் மரணம்!

அந்தியயேட்டி வீட்டுக்குச் சமைக்கச்சென்றவர் மயக்கமுற்ற நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் வழியில் மரணமடைந்தார். குளப்பிட்டி, கொக்குவில் மேற்கில் உள்ள வீட்டின் இடம்பெறும் அந்தியேட்டிக்கு சமைக்கவென வியாழக்கிழமை இரவு சென்று அங்கு சில பணிகளை மேற்கொண்டு விட்டு இரவு நித்திரைக்குச் சென்றுள்ளார். அதிகாலையில் சமையலைத் தொடங்கும் முகமாக ஏனையவர்கள்...

யாழில் சிறைக்கைதிகள் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் நாடளாவிய ரீதியில் சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ் மாவட்டத்திலும் சிறைக்கைதிகள் நேற்று (25) விடுவிக்கப்பட்டனர். சிறுகுற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையில் இருந்தவர்கள் என ஒரு பெண் உள்ளிட்ட எட்டுபேர் விடுதலைசெய்யப்பட்டனர். யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரி எஸ்.இந்திரகுமார் தலைமையில் இந்நிகழ்வு யாழ் மத்திய சிறைச்சாலையில்...

நாடு முழுவதும் இன்று காலை 9.25 – 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி

சுனாமி பேரலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இன்று காலை 9.25 மணி முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்....

பாடசாலை மாணவிகள் இருவரை காணவில்லை

பாடசாலை மாணவிகளான சகோதரிகள் இருவரை காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் பண்டைவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சிந்துஜா (வயது 17) மற்றும் இளைய சசோதரியான சந்திரகுமார் நிவேதினி (வயது 14) ஆகிய இரு சகோதரிகளும் காணாமல் போயுள்ளனர். சந்திரகுமார் சிந்துஜாவின் சீருடை பெறுவதற்காக வட்டு இந்து கல்லூரிக்கு...

குசல் ஜனித் பெரேராவிற்கு போட்டித் தடை

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு கிரிக்கட் விளையாட சர்வதேச கிரிக்கட் கவுன்சில் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலினால் விதிக்கப்பட்ட இந்த போட்டித் தடையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு...

நான்காவது முறையாக சுசீந்திரனுடன் இணையும் இமான்

விஷாலை வைத்து ‘பாயும் புலி’ இயக்கிய சுசீந்திரன், அடுத்ததாக உதயநிதியை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதற்கு முன் சுசீந்திரன் இயக்கிய ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’ ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இதை தொடர்ந்து நான்காவது முறையாக இப்படம் மூலம்...

கனடா உறங்கா விழிகள் அமைப்பு 245,000 பெறுமதியான உதவிகள் வழங்கல்

தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2015 டிசம்பர் மாதம் கனடா உறங்கா விழிகள் அமைப்பு 245000 பெறுமதியான உதவிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கியுள்ளது. மேற்படி உதவிகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் பாடசாலைக்கல்வி, மருத்துவ சிகிச்சை, வாழ்வாதாரம் போன்ற தேவைகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளாகவும் கல்வி உபகரஙணங்கள் வழங்குதல் மற்றும் இலவசக் கல்வி...

இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில்

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (26.12.2015) பி.பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...

சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் சந்தித்து பேசினர்!

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இருவருக்கும முரண்பாடுகள் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் பல மாதங்களின் பின்னர் அவர்கள் இருவருக்குமிடையிலான அவசர சந்திப்பு இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பாக முதல்வர் தெரிவித்தாவது...

பொலித்தீன் தடையை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொலித்தீன் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ஜனவரி மாதம் முதல் கடுமையான நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. 20 மைக்ரோனுக்கு குறைவான அடர்த்தியைக் கொண்ட பொலித்தீனை தயாரிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது மற்றும் வைத்திருப்பது போன்றவை 2007ஆம் ஆண்டே தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே பொலித்தீன்...

சுனாமியில் சிக்கியுள்ளார் சம்பந்தன்!

விக்னேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் சிக்கித் தவிக்கிறார் என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும்கூட விக்னேஸ்வரனே பிரபலமானவராக காணப்படுகின்றார். உதாரணமாக விக்கினேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்...

சம்பந்தனுடன் வட மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே...

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள கட்டமைப்பு

கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்த பின்னர் அரச சேவைக்காக புதிய சம்பள கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை உருவாக்கவில்லை என்றால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டு மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் என அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே கூறியுள்ளார். அரச ஊழியர்களுக்கு இடைக்கால வரவு...

யாழில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை

கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம்(22) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இச்செயலமர்வில் சிறுவர்...

இயேசுவின் வாழ்வினை அடிப்படையாக கொண்டு எமது வாழ்வினை கட்டியெழுப்புவோம்!

இயேசுவின் வாழ்வினை அடிப்படையாக கொண்டு எமது வாழ்வினை நாம் அனைவரும் கட்டியெழுப்புவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் இன்று (25) அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நத்தார் தினத்தினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வௌியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும்...

எம்.ஜி.ஆரின் 28வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

தமிழக முன்னால் முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரனின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு பகுதில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்க...

லசித் மாலிங்கவிற்கு பதிலாக திஸர பெரேரா

இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு, நியுசிலாந்து அணியுடனான ஒரு நாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியின் போது இவருக்கு இந்த...
Loading posts...

All posts loaded

No more posts