Ad Widget

சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் சந்தித்து பேசினர்!

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இருவருக்கும முரண்பாடுகள் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் பல மாதங்களின் பின்னர் அவர்கள் இருவருக்குமிடையிலான அவசர சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பு தொடர்பாக முதல்வர் தெரிவித்தாவது “நாங்கள் பல விடயங்களை சுமூகமாகப் பேசிக் கொண்டோம். கூடிய விரைவில் மேலும் பல விடயங்கள் சம்பந்தமாக பேசிக் கொள்வோம். மக்களின் நன்மைதான் எங்கள் இருவருக்கும் முக்கியமானது, ஆகவே அது சம்பந்தமாக தொடர்ந்து இருவரும் பேசிக் கொள்ள வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டது.

விரைவில் சட்டத்தரணி கனகீஸ்வரன் தலைமையில் இன்னுமொரு பேச்சுவார்த்தை நடைபெறும் என் முதலமைச்சர் தெரிவித்தார்

Related Posts