போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது! ஐ.நா.

இலங்கையில் போரின் இறுதித் தருணங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து இலங்கை அரசு உறுதியாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ - மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேள்வியொன்றிற்கு...

கொத்துக்குண்டு பாவனை சட்டவிரோதமானதல்ல! கண்டனங்கள் மத்தியில்மீண்டும் பரணகம

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கொத்துக்குண்டு பாவனையை நியாயப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தனது கருத்தை நியாயப்படுத்தி மீண்டுமொரு அறிக்கையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார். 2010 ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பாவித்திருந்தால் அது தவறானதல்ல என்பதே அவரது வாதமாகும்....
Ad Widget

6 மாத கால அலசலின் பின்னரே நாமல் கைது! அரசியல் பழிவாங்கல் இல்லை என்கிறது அரசு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்‌ஷவின் கைதானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையென மஹிந்த ஆதரவு அணி முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசு நிராகரித்தது. 6 மாதங்கள் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், உரிய நெறிமுறைகளுக்கு அமையவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா...

கொலைக்குற்ற குற்றவாளிக்கு பிணை வழங்க மறுப்பு!

கொலைக்குற்றம் ஒன்றுக்காகப் பத்து வருடம் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. அந்தப் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், கடந்த 2009...

யாழிலிருந்து வெள்ளவத்தைக்கு புதிய பஸ் சேவை

இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை நாளை (15.7.2016) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இச் சேவை தினமும் வெள்ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் இரவு 10 மணிக்கும் நடைபெறும். இப் பஸ் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஊடாக...

இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படுவர்!- நிதி அமைச்சர்

எதிர்வரும் காலங்களில் இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படவுள்ளதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோத்தா, பசில் மட்டுமல்ல இன்னும் பலர் கைதுசெய்யும் பட்டியலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் வாழும் பிரஜை என்ற ரீதியில் அடுத்த கைது யாரென தான் அறிந்து...

அச்சுவேலி தொலைத்தொடர்பு நிலையத்தில் தீ

அச்சுவேலி நகரப்பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் நகரப்பகுதியில் அமைந்துள்ள மூன்று கடைதொகுதியின் கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மேலும் இரு கடைகள் பகுதியளவில் எரிந்துள்ளன. இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில்...

இறுதி யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்படவில்லை– அரசாங்கம்!

இறுதி யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லையெனவும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினர் பொதுமக்களை இலக்குவைத்து பயங்கரவாதிகளைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபடவில்லையெனவும் பொதுமக்களைக் காப்பாற்றியே பிரச்சனைக்குத்...

சம்பந்தன் தேவையில்லையென்கிறார் சுமந்திரன் தேவையென்கிறார் யார் கூட்டமைப்பின் தலைவர்? அரசாங்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? சுமந்திரனா? அரசாங்கத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தனின் கருத்தை மீறி சுமந்திரன் கருத்து வெளியிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யுத்தக் குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் இணக்கம்...

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு: இரகசிய வாக்குமூலங்களை தர மறுப்பு

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் கூறினார். வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 'இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில்...

கல்லுடைக்கும் தொழிற்சாலையால் மக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம், ஈவினை கிழக்கிலுள்ள கல்லுடைக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தூசுப் படலம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், வீதியில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறுகளும் ஏற்படுகின்றன. மேற்படி இடத்தில் இயங்கி வரும் கல்லுடைக்கும் தொழிற்சாலைக்குத் தேவையான கற்கள், அருகாமையிலுள்ள காணியில் குவிக்கப்பட்டு, பாரிய அரிதட்டுக்கள் மூலம் அரிக்கப்பட்டு, அதன் பின்னர் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நேரக்கட்டுப்பாடின்றி அரிதட்டில்...

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு கேரளாவில் செயலமர்வு

வடமாகாண சபையின் 10 உறுப்பினர்கள், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என 16பேர் கொண்ட குழுவினர், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான செயலமர்வொன்றுக்காக கேரளாவுக்குச் செல்லவுள்ளனர். ஏசியன் பவுண்டேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வுக்கு, முதற்கட்டமாக 10 உறுப்பினர்கள் அழைத்துச் செல்லப்படுவதாகவும், எஞ்சியவர்கள் சுழற்சி முறையில் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்...

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகள் இடித்தழிப்பு

வலிகாமம் வடக்கில், தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர். கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு கிராமங்களினதும் பகுதியளவு பிரதேசங்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்படாத காணிகளில் உள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அழிக்கப்படும்...

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதியினை குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் செம்மணி வீதி வழியாக யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்துள்ளார்....

35 அகதிகள் இன்று நாடு திரும்பினர்!

தமிழகத்தில் இருந்து இன்று 35 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் அனுசரணையில் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர். மதுரையில் இருந்து 17 பேரும் சென்னையில் இருந்து 18 பேரும் இரண்டுவிமானங்களில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை தந்த அகதிகளில் 11 ஆண்கள் மற்றும் 24 பெண்கள் உள்ளடங்கியுள்ளதாகபுனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சிவஞானஜோதி உறுதிப்படுத்தியுள்ளார்....

நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்கள்

நிவாரண விலையின் கீழ் 15 வகையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த பொருட்களுள் சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், டின் மீன் , பயறு, கௌபி, நெத்தலி, கடலை, கொத்தமல்லி, பாம் எண்ணெய், சோயா, மாசி மற்றும் கருவாடு ஆகிய பொருட்கள் அடங்குவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.நிதி அமைச்சில்...

250 இந்திய படகுகளுக்கு அனுமதி வழங்கப்போகின்றதா இலங்கை?

வரை­ய­றுக்­கப்­பட்ட நாட்­களில் 250 இந்­திய மீனவ பட­குகள் இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­வது குறித்து இலங்கை அர­சாங்கம் ஆராய்ந்­து­வ­ரு­வ­தாக இந்­திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்­டுள்­ளது. இந்­திய மீன­வர்­க­ளினால் இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் மேற்­கொள்­ளப்­படும் அழி­வு­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கி­லேயே அர­சாங்கம் இந்த முடி­வுக்கு வந்­துள்­ள­தாக அந்த ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது. தற்­போ­தைய நிலை­மையில் தினம் ஒன்­றுக்கு 3000...

தொடரும் முன்னால் போராளிகளின் மரணம்

சமீபத்திய காலமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னால் போராளிகளின் மரணங்கள் மீதமிருக்கும் போராளிகளின் மனதிலும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது இந்த வரிசையில் முன்னால் போராளியும் பொட்டம்மானின் சாரதியாக இருந்த சசிகுமார்(ராகுலன்) என்பவரும் காலமாகியுள்ளார் தொடரும் இந்த மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன? என்பது விடையில்லா புதிராக உள்ளது போராளிகள் புனர்வாழ்வளிக்கப்படும்போது இராணுவத்தினரால் திட்டமிட்டு ஏதேனும் விஷமருந்துக்கள்...

கொழும்பு வைத்தியசாலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனமுற்று நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள மாகாண சபைக்கட்டடத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம் தனக்கு...

பாடசாலைக்குச் செல்லாது குடும்பமாக இருந்த சிறுமி!! அதிகாரிகள் அதிர்ச்சி

பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் 15 வயது மாணவி ஒருவர் குடும்பமாக வாழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களை இனங்கண்டு மீண்டும் அவர்களைப் பாடசாலைகளில் இணைக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி நீதவான் பணிப்புக்கமைய செயற்படுத்தப்படுகின்றது. மலையாளபுரம், பாரதிபுரம், பொன்னகர், கிராமங்களில் சில நாட்களாக திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன....
Loading posts...

All posts loaded

No more posts