தமிழ் கலைத்துறைக்கு மாபெரும் சேவையாற்றிய படைப்பாளி இராமதாஸ்

நம் நாட்டின் தமிழ் கலைத்துறைக்கு மாபெரும் சேவையாற்றிய படைப்பாளியாகி எஸ். ராம்தாஸ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் வானொலி நாடகத்துறையூடாக ஆரம்பத்தில் தன்னுடைய கலைப்பணியை ஆரம்பித்த இவர், பின்பு மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் ஊடாகவும் தன்னுடைய கலைப்பணியினை இடைவிடாது...

அங்கவீனமுற்ற படைவீரர்கள் யாழ் விஜயம்

இலங்கை இராணுவத்தினரினால் நிர்வகிக்கப்படும் ஆரோக்கிய பராமரிப்பு விடுதியில் தங்கியுள்ள அங்கவீனமுற்ற படைவீரர்கள் யாழ்பானத்திற்கான சுற்றுலா ஒன்றினை அண்மையில் (12) மேற்கொண்டனர். இச்சுற்றுபயணத்தில் ஓய்வு விடுதியில் பராமரிப்பு பெற்று வரும் முப்பது அங்கத்தவர்கள் பங்குபற்றிய அதேவளை அவர்களோடு இணைந்து மருத்துவர்கள், தாதி, உடற்பயிற்சி மருத்துவர் மற்றும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட 16 பேர்களைக் கொண்ட மருத்துவ குழுவொன்றும் சென்றது....
Ad Widget

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை இல்லாது செய்ய முயற்சிக்கிறார்கள்

பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைய வேண்டும் என்பது தொடர்பில் நடாத்திய வாக்கெடுப்பானது, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதாக இருக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்கட்சியின் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ் யூரோவில் மண்டபத்தில் நடைபெற்ற வடமாகாண மக்கள் செயற்றிட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். வவுனியா பொருளாதார...

புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிக்க யோசனை

அனைத்து வெட் வரிகளையும் நீக்கிவிட்டு புகையிலை நிறுவனங்களின் வரியை 90 வீதமாக அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மற்றும் தன்னுடைய கூட்டு யோசனையாக அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிப்பதாக அவர் மேலும் கூறினார்....

நெடுந்தீவில் நடைபெற்ற வடமாகாணசபையின் குறைநிவர்த்தி நடமாடும் சேவை

வடமாகாணசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் நேற்று வியாழக்கிழமை (14.07.2016) குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடாத்தியுள்ளது. இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் அமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மீன்பிடி அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்கள் பங்கேற்றிருந்தன. இவற்றோடு, நில அளவைத் திணைக்களம், தொழில்...

இன்றிலிருந்து 4 நாட்களுக்கு கடும் மழை

இன்று வியாழக்கிழமை (14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையான நாட்களில் நாடு முழுவதும் கடும் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய மாகாணத்தில் அதிக மழை பெய்யலாம் எனவும் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது.

சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்றோர் விபரங்களை வழங்கிய கட்டளைத் தளபதி

வட்டுவாகலில் சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கொண்டு வந்த முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் கோபமடைந்து ஏசினார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 05 பேரின் உறவினர்கள் தாக்கல்...

வீட்டுக் கிணற்றில் கைக்குண்டுகள்!

யாழ்.பொம்மைவெளி பகுதியில் 6 கைகுண்டுகள் இணங்காணப்பட்டுள்ளதாகவும், குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வீடொன்றில் கிணற்றை வீட்டு உரிமையாளர் இன்று வியாழக்கிழமை துப்பரவு செய்துள்ளார். இதன்போது கிணற்றில் 6 கைக் குண்டுகள் இருப்பதைக் காண்டு ஊடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோது பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று...

இராணுவ கட்டளைத் தளபதி மன்றில் ஆஜர் : சரணடைந்த போராளிகள் விபரம் வெளியாகலாம்!!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக இராணுவ...

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விலைகள் பின்வருமாறு, கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா கோழி இறைச்சி (தோல் இல்லாமல்) 495 ரூபா பருப்பு - 169 ரூபா சீனி (1 கிலோ கிராம்) - 95 ரூபா நெத்தலி (தாய்லாந்து) 1 கிலோகிராம் - 495 ரூபா நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம்...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றைய தினமும் தொடர்வதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு கூறியுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு இதுவரை நியாயமான தீர்வுகள் கிடைக்கவில்லை என்று அதன் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே கூறுகின்றார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். எவ்வாறாயினும்,...

பல்கலைக்கழக பணியாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!

அரச பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் மாத சம்பளத்தை பல்கலைக்கழகங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கான சுற்றரிக்கையினை வெளியிடுவதற்கு உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களின் அலுவலக பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையானது 57 இல் இருந்து 60 வரை அதிகரிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான விசேட கொடுப்பனவாக 20 வீதத்தை ஊழியர் சேமலாப நிதியில் வைப்பிலிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக...

75 நாட்கள் அல்ல 75 செக்கன்களுக்கும் இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் வடக்கு மீனவர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டொன்றின் 75 நாட்களுக்கு...

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனைச் சந்தைக்கு எதிரில் இருந்து வவுனியா அரச செயலகத்திற்கு பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். வவுனியா பொருளாதார...

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களை நிறுவ அனுமதி!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட எட்டு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொழில்நுட்ப பீடங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 'ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அனுமதி 5 வீதத்தால் அதிகரிக்கின்றது. இந்நிலையில், பட்டப்படிப்பை தொடரும்...

சமையல் நிகழ்ச்சியில் நிஷா பிஸ்வால்!

மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாகினி தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ‘நுகசெவன’ என்ற சமையற்கலை தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டார். இலங்கையின் பிரபல சமையற்கலை நிபுணர் பப்ளிஸ் சில்வாவின் வழிகாட்டலின் கீழ் நிஷா பிஸ்வால் உள்ளூர் உணவொன்றைச்...

சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடக்கூடாது!

வட மாகாணத்தில் நடைபெறும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடக்கூடாதென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்கு மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு முப்படைகளின் கட்டளைத் தளபதியையும், கடற்படையின் அதிகாரிகளையும் நீக்குமாறு கோரி வடமாகாண சபையின் பிரேரணைக்கு அமையவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 56ஆவது அமர்வு நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை)...

கடத்தப்பட்ட மாணவர்கள் உயிருடனுள்ளனர் !! வைபரில் தகவல்!

கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வைபர் ஊடாக செய்தி அனுப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவில் சவூதி அரேபியாவில் உள்ள உறவினர் ஒருவர் ஊடாக...

மனைவிக்கு தீ மூட்டிய கணவன் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் மனைவிக்கு தீ மூட்டி தானும் தீ முட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌந்தராஜா உதயராஜா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவர்கள் இருவரும், 3 மாதங்களுக்கு முன்னர்...

அரசுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயக்கம்! நிஷா பிஸ்வால்

"இலங்கையில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும்போதுதான் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். அதனை தற்போது கூறி நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது.'' இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய...
Loading posts...

All posts loaded

No more posts