ராஜீவ் கொலை வழக்கு: இலங்கைக்கு மாற்ற கோரிக்கை

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்ற சாந்தன், தன்னை இலங்கைச் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை, அவரது உணர்வை மதிக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்காக தழிழக சிறையில் உள்ள போது தனது தந்தையை இழந்துள்ளார். இலங்கை சிறையில் இருந்தால அவரது...

விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்கள்! முதற்கட்டமாக வடக்கு கிழக்கில்!!

உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை பகுதிபகுதியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது. அதன்படி எல்லை நிர்ணயப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் எல்லை நிர்ணயம் முடிவுற்றிருக்கும் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை விரைவில் நடத்த முன்னேற்பாடுகளைச் செய்ய ஆயத்தங்கள் நடந்துவருவதாக அறிய முடிகின்றது. கூட்டு...
Ad Widget

கஞ்சா வைத்திருந்தவரின் பிணை நிராகரிப்பு! பிணை மனுவும் தள்ளுபடி!!

கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தபோது இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையில் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. அத்துடன் பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. மாதகல் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ரொபின்தாஸ் என்பவர் கடந்த 19.06.2014...

கனேடிய தமிழ் எம்.பி. சம்பந்தனுடன் சந்திப்பு

கனேடிய தமிழ் காங்கிரஸின் தலைவரும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். தனிப்பட்ட பயணமாக இலங்கை வந்தள்ள கனேடிய ஆளும் கட்சியியான லிபரல் கட்சியின் ஸ்காபரோ தொகுதி எம்.பியான ஹரி ஆனந்தசங்கரி ஈழத்தமிழர்களாகாக போராட்டங்களை மேற்கொண்டு வருபவர் ஆவார். சம்பந்தனை சந்தித்த...

கல்வி நிர்வாக சேவைக்குள் ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை

இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. சேவை அனுபவம் தகைமை அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்...

பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி

பஸ் கட்டணத்தை 100க்கு 6 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக் தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்னறன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.

நிஷா பிஸ்வால் வந்தடைந்தார்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், நாட்டை வந்தடைந்துள்ளார். பங்களாதேஷ் டாக்கா நகரத்திலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான MJ – 502 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். அரசாங்கத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோரைச்...

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம், முதலமைச்சரை ஏற்றுக்கொள்ள தயார் : சம்பந்தன்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு பக்­கு­வமான படித்த முஸ்லிம் நபரை எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம் என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான ஆர்.சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­தா­லேயே வடக்கு கிழக்கு இணைந்­தி­ருக்க வேண்­டு­மென திட­மாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனை முஸ்லிம்...

மகனை பார்த்து கண்ணீர்விட்டழுத தாய் : கைதிகளுக்கு யோகாசனம் கற்றுக்கொடுக்கிறாராம் நாமல்

வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் என்ன என்ன செய்கிறார் என்று, அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். அங்குள்ள சிறை கைதிகளுக்கு அவர், யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என்றும் டலஸ் எம்.பி தெரிவித்தார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் கூறினார். இதேவேளை, நாமல்...

அமெரிக்காவின் மனித உரிமைகள் உதவி செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவர் இன்று (12) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். கடந்த...

7 வயது சிறுவன் துஷ்பிரயோகம்! பாடசாலை சிற்றூழியர் கைது

கிளிநொச்சி பளை பகுதியில் 7 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பாடசாலை சிற்றூழியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதங்கேனி பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

சிறுமியை காதலித்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நாவற்குழிப் பகுதியில் 14 வயதுச் சிறுமியை பற்றைக்குள் கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்றுத் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார். மேற்படி சிறுமியும் இளைஞனும் காதலித்துள்ளனர். இளைஞன், அழைத்ததையடுத்து, சிறுமி அவரைச் சந்திக்கச் சென்ற வேளை,...

பல்கலைக்கழக மாணவன் தற்கொலையா? கொலையா?

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கட்டுபெத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் கூறினர். கற்றல் நடவடிக்கையின் பின்னர் நேற்றைய தினம் மாலை குறித்த மாணவன் விடுதிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்...

சட்டவிரோத கருகலைப்பு: தனியார் சிகிசை நிலையத்திற்கு சீல்

கிளிநொச்சி தா்மபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாா் சிகிச்சை நிலையம் நேற்று கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதிகாரிகளினால சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிச்சை நிலையத்தில் சிறுமி ஒருவருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது எனும் குற்றச்சாட்டிற்கு அமையவே சீல் வைக்கப்பட்டதாக தா்மபுரம் பொலீஸ் தெரிவித்துள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சோ்ந்த 14...

வடமாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம்

வடமாகாண கடற்பகுதியில் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தக் கோரி வடமாகாணசபையை முற்றுகையிட்டு மாகாண கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு வடமாகாணத்தின் 4 மாவட்டங்களிலும் இருந்து வந்த கடற்றொழிலாளர்கள் வடமாகாணசபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தக்...

அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர் தொகை அதிகரிப்பு!! பட்டதாரிகள் அதிர்ச்சி

பட்டதாரிகளிற்கு நிமயனம் வழங்கப்போவதாக மத்திய, மாகாண அரசுகள் அறிவித்தல் விடுத்துள்ளமையானது மகிழ்ச்சியளிக்கின்ற விடையமாக இருக்கின்றபோதிலும் தொண்டராசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்போவதாக அரசு அறிவித்துள்ள பின்னணியில் அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர்கள் தொகை திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளமையானது தகுதிவாய்ந்த பட்டதாரிகளின் நியமனங்களி்ல் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் இச் செயற்பாடானது கல்விமட்ட அடைவுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் எனவும்...

ஐ.ஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல்!

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் இவர்கள் இலங்கை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கும் பட்சத்தில் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு தரப்பு எந்தவித தகவல்களையும்...

முழுக் குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது!-மஹிந்த

ஒட்டுமொத்தக் குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் மக்களுக்கான எனது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் தனது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவொன்றிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனது பிள்ளைகளை சிறை வைப்பதன்...

மனோகணேசன் அவர்களுக்கு வடக்கு ஊடகவியலாளர்கள் கடிதம்!

கௌரவ மனோ கணேசன் சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர் இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு. வடக்கு ஊடகவியலாளர்களது தெற்கு பயணம் பனையோலையும் எழுத்தாணியும் சேர்ந்ததோர் நட்புறவு பயணம் எனும் தொனிப்பொருளில் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் சுமார் 125 தெற்கு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக வடக்கிலிருந்து 54 ஊடகவியலாளர்கள்...

பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்!

பாண் உட்பட வெதுப்பக உற்பத்திப் பொருட்கள் அனைத்தினதும் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது எனத வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். வெதுப்பக உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பாம் எண்ணெய், மாஜரின், உப்பு, சீனி என்பவற்றின் விலை 20 வீதத்தால் உயர்ந்துள்ளது. இது குறித்து அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம். இதன் பின்னர் விலை அதிகரிப்பது குறித்துத்...
Loading posts...

All posts loaded

No more posts