Ad Widget

காரைநகரில் பஸ் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இ.போ.ச பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

இவ்விபத்து இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது.

காரைநகர் வலந்தலைச் சந்தியிலிருந்து களபூமி வழியாக துறைமுகம் செல்லும் பாதையில் (786இலக்கம்) ஊரி பிட்டியோலைக்கு திரும்புகின்ற சந்திக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தினால் சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவியதுடன் பஸ் சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்து நீண்ட நேரமாகியும் அவ்விடத்திற்கு பொலிஸார் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ctb-2

ctb

Related Posts