- Tuesday
- March 10th, 2026
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவன் செந்தூரனின் பிணை மனுவை நீதிபதி ம.இளஞ்செழியன் நிராகரித்தார். அத்துடன் அவரை சிறையில் இருந்தவாறு ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். குறித்த மாணவன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்றுக்கு...
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையார் ஒருவரையே கடந்த 05 ஆம் திகதி...
வட மாகாணத்தில் சுமார் 35,000 பேர் வரை வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வட மாகாணத்தில் 3200 நிறுவனங்கள் வரை இருப்பதாக குறிப்பிட்ட அவர் அதில் பத்தாயிரம் வரையோனோர் பணி புரிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய வேளையே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை...
யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த வேன் ஒன்று பண்ணைப் பாலப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பண்ணை பாலப் பகுதியில் நேற்று (11) திங்கட்கிழமை மதியம் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் ஆளவெட்டி பகுதியைச் சேர்ந்த...
வன்னி இறுதி யுத்தத்தில் அழிந்து போயுள்ள வாகனங்களுக்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்கள் பல, முள்ளிவாய்க்கால் வரை சென்றிருந்த நிலையில், உரிமையாளர்களால் கைவிடப்பட்டிருந்ததுடன், அவர்களும் முற்றாக வெளியேறியிருந்தனர். பின்னர், அவை அனைத்துமே காணாமலும் எரியுண்டு அழிந்தும் போயிருந்தன. இந்நிலையில், தமது வாகனங்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கொடுப்பனவுகளை...
வடமாகாணத்தில் 2018ஆம் ஆண்டில் இராணுவம் இருக்காது என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அது நடக்குமானால் இராணுவம் போகும் போது, விகாரைகளையும் கொண்டு செல்ல வேண்டும்' என, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'முல்லைத்தீவு மாவட்டமானது, பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர் காலத்துக்கு முன்பு...
முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான, ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் நேற்று காலை ஆஜராகி வாக்குமூலமளித்தார். அதனையடுத்து,...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச்...
எரிபொருள் வகைகளில் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கனியவள மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அதனடிப்படையில் இந்திய எரிபொருள் நிறுவனங்களினால், Xtra Premium Euro3 மற்றும் Extra Mile ஆகிய எரிபொருட்களின் உற்பத்தி விலைகள் 2 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 பேரின் ஆதரவுடன் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2,000 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைக்குமாறு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வவுனியாவில் எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில்...
பெறுமதி சேர் வரி விகிதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நூற்றுக்கு 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் 70 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
971ஆம் ஆண்டு அரசியல் கைதியாக மட்டக்களப்பில் தான் சிறைவைக்கப்பட்ட சிறைச்சாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று பார்வையிட்டார். அது தொடர்பான வீடியோவை, ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணத்துச் சித்தர் பரம்பரையில் முக்கிய மானவராகக் கருதப்படுபவர் கடையிற் சுவாமிகள். இந்தியாவில் இவர் நீதிபதியாக இருந்த போது சட்டத்திற்கிணங்க குற்றவாளி யொருவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கி விட்டாராம். இதனால் இவருடைய மனசாட்சியில் ஏற்பட்ட ஒரு வித உறுத்தல் தான் அவரது துறவு வாழ்க்கைக்குக் காரணமாம். இலங்கையின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசரொருவர், தான் வழங்கிய ஒரு...
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இவருடன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் மன்பிரீட் சிங்கும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இவர்கள் இந்த விஜயத்தின்போது அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள்...
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதற்கு 2010ஆம் ஆண்டு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவிருக்கும் காணிகளை நேற்று முன்தினம்(சனிக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர்...
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரமறுத்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை, அவர் மீது கொண்ட ஆத்திரத்தினால் அடித்து நொக்கினார் விகாராதிபதி. ஜனாதிபதி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்புக்கு பயணம் செய்து மட்டக்களப்பு விமானநிலையத்தைத் திறந்துவைத்தார். மட்டக்களப்புக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவை மட்டக்களப்பு விகாரைக்கு வருமாறு மங்களராமய விகாரையின் விகாராதிபதி வண.அம்பிட்டியே சுமணரத்ன தேரர்...
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை அமைத்து விசாரணை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற வித்தியாவின் கூட்டு வன்புனர்வு நாட்டை பெரும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...
புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமானப்படை முகாம் விமான ஓடுபாதை மற்றும் பயணிகள் இறங்குதுறை ஆகியன நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது. நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையில் வந்திறங்கிய முதலாவது விமானத்தில் ஜனாதிபதி பிரயாணம் செய்தமை விசேட நிகழ்வாகும். இதன்போது ஜனாதிபதிக்கு விமானப்படை அணிவகுப்பு மரியாதை கிடைக்கப்பெற்றதுடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்களவினால்...
தனியார் பஸ் கட்டணங்களை 6 தொடக்கம் 7 சதவிகிதம் அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்திருக்கின்றது என போக்குவரத்து அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அதன்பிரகாரம் தற்போது 8 ரூபாவாகவுள்ள ஆகக்குறைந்த கட்டணம் 9 ரூபாவாகவும், 12 ரூபா கட்டணம் 13 ரூபாவாகவும் உயரலாம் எனவும், பஸ் உரிமையாளர்களையும் பயணிகளையும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்த உயர்வு...
Loading posts...
All posts loaded
No more posts
