- Monday
- March 9th, 2026
தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இதில் பங்கு கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் tmailmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தம்முடன் தொடர்புகொண்டு தங்களுடைய விபரங்களுடன்...
இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் இரண்டு நாட்கள் மீன்பிடித்தொழிலை செய்வதற்கான கோரிக்கையினை நிராகரிக்க வலியுறுத்தி வடபகுதி மீனவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் எம்.என்.ஆலம் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 12ம் திகதி (நாளை) செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள்...
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இறுதி முடிவின்றி தொடர்கின்றது. வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர்...
இன்று நாடு பூராகவுமுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த திணைக்களத்தின் வானிலை ஆய்வாளரான மலிந்த...
வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக செ. மயூரன், நேற்று சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின், சுழற்சி முறை ஆசனத்துக்கான உறுப்பினராக இதுவரை பதவி வகித்து வந்த எம். பி. நடராசா, கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அடுத்த சுழற்சி முறை ஆசனத்துக்காக செ.மயூரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்....
இருநாட்டு மீனவர்களது, 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தாங்கள் சந்திக்க வேண்டும் என்று வடபகுதி மீனவர்கள் கோரிக்ககையை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவே இவ்விருவருடன் பேச்சுவார்த்தை...
ஊடகங்களின் பொறுப்பு, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வதே தவிர அவர்களை வழிகெடுப்பது அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பேராதனை ஸ்ரீ சுபோதிராம விகாரையில், நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இன்னும் இரு வாரங்களுள்...
எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் நாட்டின் தென்னை உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிக்க வேலைத் திட்டங்களை தாம் ஆரம்பித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டாவது முக்கோண தென்னை பயிர்ச் செய்கை வலயத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தென்னை அபிவிருத்தி விரிவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட கைத்தொழில்...
இலங்கையில் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்களிடம் கையூட்டு மற்றும் பாலியல் கையூட்டு கோரப்பட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் காணமால் போயுள்ளவர்கள் பற்றி நம்பகமான விசாரணை நடத்துவதற்காக, அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் குறித்து பொது...
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்காவுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (09.07.2016) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்கா வடக்கின் விவசாயத்தேவைகள் குறித்து அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கேட்டறிந்து கொண்டார். இச்சந்திப்பு பற்றி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கருத்துத் தெரிவிக்கையில்,...
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கான காணிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பார்வையிட்டுள்ளனர். இதற்கமைய தாண்டிக்குளம் மற்றும் ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ்...
புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர். ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் கிழக்கை சேர்ந்த 35, 39 வயதான ஆசாமிகள் என்பதும், கைது செய்யப்படும் போது அவர்கள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில்...
வடமராட்சி பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சிங்கைநகர் புலோலி தெற்கைச் சேர்ந்த மினிஸ்வரன் விஜிதரன் (வயது 26) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். சிங்கை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து பருத்தித்துறை...
இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி...
இணுவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளை செந்தமிழால் திருக்குடமுழுக்கு நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிவலிங்கத்தை படத்தில் காணலாம். இராவணேஸ்வரன் தாங்கியுள்ள இச்சிவலிங்கத்தை அடியவர்கள் நேரில் தரிசித்து மலர் தூவி வழிபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி யாழில் இராவணனுக்கு ஆலயம்!! செந்தமிழில் பூஜை வழிபாடுகள்!!
இறுதி யுத்தத்தின்போது சிறீலங்கா இராணுவத்தினர் கொத்துக்குண்டுகளை வீசவில்லையென போரை வழிநடத்திய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் கொத்துக் குண்டுகளை வாங்குவதற்கான பணபலம் தம்மிடம் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தவில்லை. அதனை வாங்குவதற்கான பணபலமும் எம்மிடமிருக்கவில்லை. இது தொடர்பாக நான் சாட்சியமளிக்கவும் தயாராக...
அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்துறையில் வசித்து வந்த இளைஞரே அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியில் மரக்கொப்பில் இன்று தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது என்று ஈழக் கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் கூறுகிறார். வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை குறித்து தனது முகநூலில் பதிவிட்ட கருத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது குறிப்பு. 1977 இனக்கலவரம் வரைக்கும் யாழ்பாணம் மாவட்ட சந்தைகளுக்கு நேரடியாகவே சிங்களப் பகுதிகளில் இருந்து...
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தை பிரதேசத்தில் அமைப்பதற்கு உகந்ததாக அமையுமா என்பது தொடர்பில் ஆராய்வு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினரே இன்று சனிக்கிழமை ஓமந்தை பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கைத் தீவு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையினை வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா பொறியியலாளர் நிறுவனத்தின் மின் சக்தி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார செலவுகள் உயர்வடைந்துள்ளமையினால் மீண்டும் மின்சாரம் தடையேற்படுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை...
Loading posts...
All posts loaded
No more posts
