Ad Widget

யாழ். மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்

யாழ். மாநகர சபையில் பணியாற்றும் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் தமது தேவைகள் மற்றும் தாம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு நீதி வழங்க கோரி இன்று புதன்கிழமை தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

03082016

யாழ்.மாநகர சபை வளாகத்தில் இன்று புதன்கிழமை காலை 7.00 மணிமுதல் தமது தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

யாழ்.மாநகர சபையில் வாகன மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட இதர பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள், தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து யாழ்.மாநகர ஆணையாளருடன் பல சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

அந்த சந்திப்புக்களின் பிரகாரம், நிரந்தர நியமனம் மற்றும், தொழிலாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொழிலில் இருந்து வேறு தொழிலுக்கு மாற்றப்பட்டமை குறித்து எந்த பதில்களும் இதுவரை கிடைக்காத நிலையில் தமது தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

யாழ்.மாநகர ஆணையாளரினால் தமது கோரிக்கைகள் இன்றும் ஏற்றுக்கொள்ளத் தவறின் தமது போராட்டத்தினை எதிர்வரும் 08ம் திகதி மீள நடாத்துவோம் என்றும் ஊழியர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

Related Posts